ADS 468x60

04 February 2021

நாம் அனைவரும் சுதந்திரம் பெற்றுவிட்டோமா?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க நினைப்பது சுதந்திரமென்றால் என்ன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? நாம் சுதந்திரமாகத்தான் இந்த நாட்டில் இருக்கின்றோமா? இதை அனைவராலும் உணர முடிகிறதா? பெப்ரவரி 4-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதாக கொண்டாடுகிறோம். ஆங்கிலேயன் வந்த பிறகுதான் நாம் அடிமையானோமா? அதற்கு முன் நாம் அனைவரும் முழு சுதந்திரமாக, அதுவும் இலங்கையர்கள்  என்ற வகையில் ஒற்றுமையாக வாழ்ந்தோமா? ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களும்; சூழ்ச்சியில் சிக்கி சுயத்தையிழந்து ஆட்சி செய்ததின் விளைவு, நாட்டில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தனர் கையில் விலங்கிட்டு சிறையில் அல்ல. சிந்தனைக்கு விலங்கிட்டதால் நாட்டிலும், வீட்டிலும்.