ADS 468x60

04 March 2015

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க


சுற்றிவர வாவி வளைந்து ஓடிடும்- அதில
சுருதியோட மீன்கலெல்லாம் பாடிடும்
படுவான் கரை வயலுக்குள்ள பரணுங்க-அதில
பாடும் கூத்துபாடல் எங்க திறனுங்க

கிழக்கினிலே எங்க நகரு நடுவில- வள்ளி
கிழங்கு வெளயும் தோட்டகர மடுவில
வீரமெண்டா பாயும் புலி நாங்கடா-சும்மா
வாய குடுத்து அடிபடாம போங்கடா

தொப்பிகல போகலயா கண்ணம்மா -அங்க
சுத்திவர வெளஞ்சிருக்குது பொன்னம்மா
கடக்கரையில நடனமாடும் தென்னம்மா-நம்ம
விபுலாநந்தன் வந்துபிறந்த மண்ணம்மா!

0 comments:

Post a Comment