ADS 468x60

03 April 2011

கிரிகட் பெற்றோளின் விலையை சரிக்கட்டுமா?

உலகம் மாயையால் ஆனது என சித்தாந்திகள் சொல்லுவது என்னவோ உன்மை தான் எனத் தோணுகிறது. ஏனென்றால் சாதாரண மனிதர்கள் இலகுவில் மாயையில் அகப்பட்டு விட்டால் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட அந்த மாயைக்குள் அகப்பட்ட பின் அறியார்கள். உலகம் எனும் மாயைக்குள் அதிலும் 11 பேர் விளையாடும் கிரிக்கட் எனும் மாயைக்குள் 20 மில்லியன் மக்களின் கண்கள் கட்டப்படும் அந்ந தினம் அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது போலும். அந்த நாளில்தான் அதுவும் முட்டால்கள் தினத்தில்தான் நாம் எல்லோரும் விலைச் சுமையை சுமக்க வைக்கப்பட்டுள்ளோம், என சிலர் சிலாகித்துக் கொள்ளின்றனர்.

அதுதான் பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிப்பது. குறிப்பாக ஏப்ரல் 1ம் திகதி நள்ளிரவில் இருந்து 1 லீற்றர் பெற்றோளின் விலை 10 ரூபாவினாலும், 1 லீற்றர் டீசலின் விலை 3  ரூபாவினாலும் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 1890 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது பலரதும் விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

உலகக் கிண்ணம் மக்களின் உள்ளங்களில் உஸ்னத்தினை ஏற்படுத்தி அந்த உஸ்னம் நாடுகளுக்கிடையில் மாத்திரமல்ல, கணவன் மனைவிக்கு இடையில் கூட பல சர்ச்சைகளையும் விரிசல்களையும் ஏற்ப்படுத்தும் அளவுக்கு மக்கள் சோறு தண்ணியைக் கூட மறந்து ஏப்பரல் 1ம் நாள் வெள்ளிக் கிழமையே தயாராகி இருந்தனர். அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்கள் என ஏராளம் ஏராளம்... இவர்கள் கிரிக்கட்டில் மாத்திரம் தான் தங்கள் முழுக்கவனத்தினையும் வைத்திருந்தனர்.

இவற்றை நாடி பிடித்த அரசியல்வாதிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் யாருக்கும் தெரியாமல் பெற்றோலின் விலையையும் ஏற்றி விட்டனர் அல்லவா. மக்கள் யாரும் இதை கண்டு கொள்ளமுடியாமல் அந்த பொறி வைக்கப்பட்டுள்ளது என சில புத்திஜீவிகள் அங்கலாய்ப்பதனைக் காணலாம்.

உலக மட்டத்திலான பெற்றோல் விலை உயர்வு.
உலகலாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் எண்ணை விலை மாற்றம் தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் மாற்றத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது என சிலர் கூறுகின்றனர். இது குறிப்பாக சிங்கப்பூர், ஜேர்மனி, மலேசியா போன்ற நாடுகளிலும் கூட விலை அதிகரிப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அண்மையில் பெற்றோலிய துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதற்க்கிணங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நஸ்ட்டம் அவர்களின் பிழையான முகாமைத்துவத்தினாலன்றி உலகலாவிய சந்தையில் ஏற்ப்பட்ட விலைகளாலல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர் இப்போது சண்டே டைம்சிக்கு தெரிவிக்கையில் அவர்கள் மானியங்கள் மூலமாக பாரிய இழப்பினை சந்தித்து வந்தமையால் தான் இவை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மலேசியாவுடனான ஒரு ஒப்பீடு.
முன்பு கூறியது போல் வேறு நாடுகளிலும் இவ்வதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பாக மலேசியாவில் அந்த நாணய அலகில் 0.20 சதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் 10 ரூபாயால் அதிகரித்தால் என்ன என்று கேணத்தனமாய் சிலர் கேட்கின்றனர். குறிப்பாக மலேசியாவின் குடிமகன் ஒருவனின் மாதாந்த சராசரி வருமானம் இலங்கை ரூபாயில் சுமார் 150,000 ஆகும் ஆனால் இலங்கையரின் மாதாந்த சராசரி வருவாய் 20000 மட்டுமே. அத்துடன் இவர்களது நாட்டில் நவீன, வினைத்திறன் வாய்ந்த செலவு குறைந்த போக்குவரத்து சேவை வளர்ச்சி மலைபோல் வளர்ந்து இருக்கும் நிலை இலங்கையில் இருக்கிறதா? இல்லை. இன்னொரு தகவலின் படி 40 விகிதத்துக்கும் அதிகமான இலங்கையர்களின் மாத சராசரி வருமானம் வெறும் 7000 ரூபாய் மட்டுமாகவே இருக்கிறது, இந்த நிலையில் இப்படியான அத்தியாவசியப் பொருட்களின் மீதான திடீர் விலையேற்றம் ஏழைகளை இன்னும் ஏழையாக்குவதுடன் நடுத்தர வர்க்க மக்களையும் நடுத்தெருவில் இழுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக விமர்சிக்கின்றனர். ஏப்ரல் பூளில் பூளாகி விட்டோம் என்று சிலர் தலையில் அடிப்பதுபோல் கவலைப்படுகின்றனர்.

சிலர் கூறுகின்றனர் அதென்ன உலகச் சந்தையில் பெற்றோலின் விலை, தங்கத்தின் விலை எல்லாம் கூடுகிறது பின்ப குறைகிறது. ஆனால் கூடும் போது மட்டும் கூட்டும் இந்த அரசாங்கம் ஏன் குறையும் போது மட்டும் அது பற்றி கண்டு கொள்வதில்லையே என விசனம் தெரிவிப்பதனையும் காணலாம்.
ஆனால் இவை உலக சந்தையில் ஏற்ப்பட்ட விலை அதிகரிப்பினால் இல்லை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்ப்பட்ட நஸ்ட்டத்தினை சீர் செய்யவே எனக் கூறுவதை ஏற்க்க முடியுமா? இல்லை ஏனென்றால் மக்களிடமும் ஒரு லீற்றருக்கு 25 விகிதம் பணம் வரியாக அறவிடப்படுகின்றதே இந்த இழப்பீட்டை எங்கு சென்று கேட்பது??? அது தான் ஒருமுறை நீதி மன்றத்தினால் கூட இந்த பெற்றோலின் விலையேற்றம் மக்களின் உழைப்பை வரியாகக் கேட்க்கக் கூடாது என்று தீர்ப்பளித்தும் அது அரசியல் பலத்தின் மூலம் செல்லாக் காசாகிப் போனது அனைவருக்கும் தெரிந்ததே.

எது எவ்வாறு இருப்பினும் இது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தினை முழுதாகக் குறைத்துவிடும் என்ற அச்சம் பரவத்தொடங்கி விட்டது. இந்த விலையேற்றம் சில்லறைக்கடை இருந்து தேனீர் கடை ஈறாக தாக்கத்தினை ஏற்ப்படுத்தி எல்லா அடிப்படைப் பொருட்களிலும் மாற்றத்தினை ஏற்ப்ப:த்தி குடும்ப நிலைலை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோணுகிறது.

இருப்பினும் புத்திஜீவிகள் ஆய்வு ஆர்வலர்கள் பெற்றோலிய மாற்றீட்டுப் பாவனை பற்றி கரிசனை செலுத்தும் உபாயங்களை ஆய்ந்தறியத் தலைப்படவேண்டும் அவை வரவேற்ப்புக்கு உரியதாகவே அமையும்.

ஆகவே கிரிக்கட் உலகக் கிண்ணம் வெல்லப்பட்டு இருப்பின், இதன் வெற்றி, சித்திரைப் புதுவருடம் என ஒரு மாதம் உருண்டோடி இருக்கும் இந்த மாற்றம் என்னவென்றே தெரியாமல் ஓடி மறைந்து இருக்கும். ஆனால் கணிப்பு பிழைத்திருக்கும் இன்நிலையில் பல்வேறு அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து மீழ முன்னர் இன்னொரு அனர்த்தம் மக்களின் மனநிலை மாற்றத்தில் என்ன வகையான பிரதிபலிப்புகளை கொண்டுவர இருக்கின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment