ADS 468x60

11 April 2011

இது தான் தமிழர் புது வருடமா?.....

    
தமிர்களின் உண்மையான வருடம் எது?
தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.உன்மையில் இந்துக்களின் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகின்றது.

தொன்மை கொண்ட சித்திரை. 
'திங்கள் பன்னிரண்டு என்பதும், அவற்றுள் தை, மாசி, பங்குனி, கார்த்திகை முதலிய மாதப் பெயர்களைச் சங்கப் பாடல்கள் குறிப்பதனாலும் ஓர் ஆண்டில் சித்திரைத் திங்கள் முதற்கொண்டு பங்குனி ஈறாக எண்ணும் தமிழ் ஆண்டின் மாதப் பெயர் வழக்கும் பழமையானவை என்பது போதரும்' என்பார் பேரா.சண்முகம் பிள்ளை.எனவே கடந்த 2000 ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் சித்திரை முதலான மாதங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது தெளிவு.


சித்திரையின் சிறப்பு
இந்த மாதத்தில்தான் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் வீசுகின்றன. மாம்பழமும் இனிமையான பலாவும் கிடைப்பது இந்த மாதத்தில் தான்.

சங்க காலத்தில் இந்த மாதத்தில் தான் காமவேள் விழாவும் இந்திர விழாவும் கோலாகலமாய்க் கொண்டாடப் பட்டன. இந்த மாதத்தில் தான் வேப்ப மரம் பூக்கிறது. சங்க காலத்தில் வேப்பம்பூ பூக்கும் காலத்தை மணநாளுக்கு உரிய காலமாகக் கருதியிருக்கின்றனர் என்பது நற்றிணை 206 : 6 – 7 பாடல் வரிகளால் விளங்குகிறது.

இந்த நாட்களில் கூடிமகிழ்து பல விளையாட்டுகள், கலாசார நிகழ்சிகளை செய்து மகிழ்வதும் எமது பண்பாடுகளையும் மரபினையும் பறைசாத்துகின்ற ஒன்றாகும்.

உலகெங்கும் உள்ள இந்து தமிழர்களால் சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதுகதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இதனை 'இந்து தமிழ் புத்தாண்டு' என சிலர் கூறிவந்தனர். இன்னும் சிலரோ உலகில் உள்ள இந்துக்களுக்கெல்லாம் ஒரு பொதுப்படையான புத்தாண்டு இல்லை. இதுவே 'தமிழ்ப் புத்தாண்டு' எனவும் கூறிவந்தனர்.
தமிழர் நெடுங்காலம் தொட்டு சித்திரை முதலாம் நாளையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இலங்கை மற்றும் இந்தியாவில் அந்நிய ஆதிக்க ஆட்சிகளின் வருகையைத் தொடர்ந்து கிருத்தவ சமயம் தமிழர்களிடையே தோன்றவும், கிறித்தவ தமிழர்களால் இப்புத்தாண்டு கொண்டாட்ட முறை வழக்கில் இருந்து மறையத் தொடங்கியது. அதே போன்றே இசுலாம் மார்க்கம் தமிழர்களிடம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து அவர்களிடமும் இருந்தும் இப் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கில் இருந்து மறையத்தொடங்கியது. ஆனால் கடைசி வரை இந்து தமிழர்களிடம் மட்டுமே இப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ந்ததாகக் கூறலாம். மற்றும் கிருத்தவ, இசுலாம் சமயத் தமிழர்கள் இப்புத்தாண்டை கொண்டாட வில்லை என்றே உணரலாம்.

ஆனால் இலங்கை சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என தொடர்ந்து கொண்டாடிவருகின்றனர். இது பண்டைய இலங்கை தமிழர் மற்றும் தென்னிந்திய தமிழ் பண்பாடுகளின் தாக்கத்தினால் ஏற்பட்டதாகும்.

தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது

பொதுவாக வருடம் பிறந்து விட்டால் தமிழர்கள் தங்களுடைய பாரம்பரியங்களை, கலாசாரங்களை தூசி தட்டி எடுக்க தொடங்கி விடுகின்றனர். அதில் சாத்திர சம்ரதாயங்கள் மின்ன தொடங்கி விடுகின்றன. இங்கு வருடப்பிறப்பின் முழுப்பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுகின்ற ஒரு வெண்பா.

வரவிருக்கும் கர வருடம்.
விக்ருதி ஆண்டு, 14.04.2011 அன்று நண்பகல் 01.02 மணிக்கு முடிவடைகிறது. 'கர' வருடம், அன்றைய தினம் நண்பகல் 01.03 மணிக்கு உதயமாகிறது. கடக லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறக்கிறது.

இந்த 'கர' ஆண்டில், சித்திரை மாதம், 20ஆம் தேதி (03.05.2011) அன்று, ராகு/கேது பகவான்கள் முறையே தனுசு, மிதுன ராசிகளிலிருந்து விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அங்கே அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 15.01.2013 அன்று துலாம், மேஷ ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

'கர' ஆண்டு, சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.05.2011) அன்று குரு பகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்கே அவர் ஓராண்டு காலம் சஞ்சரித்துவிட்டு 17.05.2012 அன்று ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கர வருஷத்திய பலன் வெண்பா:
'கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்
உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்ரூநிறைமிகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்
பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.'

வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார். 

கர வருடப் பிறப்பு பற்றிய பொது நோக்கு.
திருக்கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பிறக்கிறது. இது அறுபது வருடச் சுற்று வட்டத்தில் 25 வருஷமாகும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மேட சங்கிரமான புண்ணிய காலமாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்
வாக்கிய பஞ்சாங்கப்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.39 க்கு பிறக்கிறது. அன்று காலை 7 மணி முதல் பகல் 3 மணி வரையும் விஷ புண்ணிய காலம் என குறிப்பிடப்படுகிறது.

புத்தாடை தரிசனம்
ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும்.

பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு
வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.

உணவு கரவருடத்தில் அறுசுவை உணவுடன் பால், தயிர், தேன், வேப்பம் பூ வடகம் போன்றவைகளை கண்டிப்பாக சேர்த்து, சுற்றம் சூழ இருந்து அளவளாவி புதுவருட உணவை உண்ணுதல் மேலானது.

கைவிசேடம்
14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.03 தொடங்கி 1.14 மணி அல்லது மாலை 06.03 தொடங்கி 07.38 வரையுள்ள சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.

விருந்துண்ணல்
புதிய கர வருடத்தில் வெளியிடங்களுக்குச் சென்று 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.18 தொடங்கி 10.27 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 11.18 தொடங்கி 12.47 வரையுள்ள சுபநேரத்தில் விருந்துண்டு மகிழ்தல் சிறப்பினை அளிக்கும்.

பெரியோர்களை சந்தித்தல்
புதிய கர வருடத்தில் பெரியோர்களை 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.28 தொடக்கம் 10.48 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 12.08 தொடங்கி 1.27 வரையுள்ள சுபநேரத்தில் சந்தித்து கலந்துரையாடுதல் நன்மை தரும்.

பூமி தரிசனம்
புதிய கர வருடத்தில் பூமி தரிசனம் செய்வதற்கு 14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.04 தொடக்கம் 1.44 வரையுள்ள சுபநேரம் அல்லது 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 8.15 தொடக்கம் 9.26 வரையுள்ள சுபநேரம் உகந்தது.

புதிய கல்வி
கர வருடத்தில் புதிய கல்வி முயற்சிகளை மேற்கொள்வதற்கு 20-04-2011 புதன்கிழமை காலை 7.33 தொடக்கம் 9-12 வரையுள்ள சுபநேரம் அல்லது 22-04-2011 வெள்ளிக்கிழமை காலை 9.12 தொடக்கம் 10.27 வரையுள்ள சுபநேரம் சிறப்புத்தரக் கூடியதாக அமையும்.

மருத்துநீர்
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலைஇ பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

இந்த இரு பஞ்சாக கால நிர்ணய புண்ணிய காலங்களில் ஏதாவது ஒன்றில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள்இ தாய்இ தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்

ஆகவே அனைவவரும் சகல செலடவமும் சந்தோசமும் பெற்று வாழ நான் எனது மனமார்ந்த வாழ்துகளை தெரிவிக்கிறேன்.

0 comments:

Post a Comment