ADS 468x60

12 April 2011

மட்டக்களப்பு மக்களின் சித்திரை வருடம்-

ஐயா வாங்க அம்மா வாங்க, தங்கச்சி வாங்க கொழுத்தும் வெய்யிலில் அழுத்தம் கொடுத்து பொருட்கள் விற்ப்பதை பார்க்கும் போது ஒரே குதூகலம் கொண்டாட்டம். ஓமாடியாமடுவில் இருந்து ஒரு குலாம், ஓந்தாச்சி மடத்தில் இருந்து ஒரு குலாம், விளாவட்டுவானில் இருந்து ஒரு குலாம், வாழைச்சேனையில் இருந்து ஒரு குலாம், மற்றது மாங்கேணியில் இருந்து ஒரு குலாம், செட்டிபாளையத்தில் இருந்து இன்னொரு குலாம்,  இப்படி அலை அலையாக அழகழகாக தமது பாரம்பரியங்களை இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு அப்பால் குழந்தைகள் இருந்து இளையவர்கள் முதியவர்கள் என படை படையாய் மட்டு நகர் வீதியெங்கும் எட்டி எட்டி போய் ஆர்வத்துடன் பொருட்களை வாங்க உழைத்த காசெல்லாம் செலவு செய்யும் ஒரு பரபரப்பான காட்சி அழகாய் இருக்கிறது.
                         (மட்டக்களப்பில் பரபரப்பாக பொருட்கள் வேண்டும் மக்கள்)
பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, பறவைகள் இசை ஒலிக்கின்றன, மரங்கள் தலையசைத்து தென்றல் வீசுகின்றது ஓ ஒரே விறுவிறுப்பு பரபரப்பு. நம்ம தழிழ் புத்தாண்டு இம்முறை விமர்சையாக பட்டி தொட்டியெல்லாம் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர் பாருங்க. இதைத்தான் சிங்களவர்களும் தங்களது புதுவருடமாக் கொண்டாடுகின்றனராக்கும். இலங்கையில் மட்டும். இதனால் தான் தமிழ் சிங்கள புத்தாண்டு என்று பெயர் வந்துள்ளது.
                                    (சாலை ஓரம் விசியாகி இருக்கும் மட்டு மாநர்)
இது தான் தமிழர்களின் வருடத் தொடக்கமாக்க் கொள்ளப்படுகின்றது.  எந்த ஒரு காரியத்துக்கும் அல்லது செயலுக்கும் ஒரு தொடக்கம் முடிவு என்பன உண்டு அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாகப் பேணி வருகின்றனர் அல்லவா.

சோதனையும் மகிழ்சியும்.
இரண்டு மாதம் விடாது பெய்த வெள்ளம், யுத்தங்களின் போதான இடப் பெயர்வு, சொந்த நாடுகளை விட்டு வெளியேற்றம், விலையேற்றம், தொழில் இன்மை, விரக்தி இத்தனையும் தாண்டி சிறிது தழிர்க்க தொடங்கி இருக்கும் எம்மக்கள் மெது மெதுவாக சுபிட்சமான் பாதை நோக்கி செல்லவேண்டும் என்பதே அனைவரதும் பிராத்தனையும் கூட இல்லையா பபாருங்க

இந்த சோதனைகளுக்கு அப்பால் நல்ல சமாதானச் சூழல், சாதகமான காலநிலை, சுகந்திரமான நடமாட்டம் என்பனவற்றினால் மக்கள் சிங்களவர் தமிழர் என்ற பேதம் மறந்து ஒரே குடையின் கீழ் இந்த துா்முகி வருடத்தினை கொண்டாட தலைப்பட்டிருப்பதை பார்க்கும் போது எனக்கெண்டா சுரியான சந்தோசமாக இரக்கிறது பாருங்கோ.

தமிழர்கள் வரலாறு பாரம்பரியம், சமய அனுட்டானங்கள் எல்லோராலும் விரும்பும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இல்லறம் மூலமான நல்லறம் அது இந்து மதத்தில் செறிந்து கிடக்கிறது. எப்போதும் விழாக்கோலம், பெருநாட்கள் இவை மக்களிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்யும் பெரிய மூலோபாயமாக அல்லவா எம் முன்னோர் அன்றே வகுத்து வைத்துள்ளனர்.


மட்டக்களப்பில் சித்திரைக் கொண்டாட்ட மரபுகள்..
குறிப்பாக பெரியளவான மாற்றங்கள் பிராந்திய எல்லைகளுக்குள் இல்லா விடினும் சில தனித்துவங்கள் இருக்கத்தான் செய்கின்றது என்ன பாருங்கோ. குறிப்பாக வழிபாட்டு முறை, கொண்டாட்ட மரபுகள், விருந்தோம்மல் என்பனவற்றில் தனித்துவம் இருக்கிறது தான்.

மட்டக்களப்பில் இப்படி தான் பாருங்க கொண்டாட்டம் வைப்பாங்க..
தமிழர்களது வாழ்க்கை முறை செம்மையாக்கப்பட்டு உன்மையான வழியில் 
செல்வதற்கு என்றே விழாக்கழும் கொண்டாட்டங்களும் அமைந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது பாருங்கோ. மட்டக்களப்பு மக்கள் இளவேனிற் காலத்தினில் வருகின்ற சித்திரை வருடப்பிறப்பினையே தங்கள் புதுவருடமாகக் கொண்டாடுகின்றனர் பாருங்க.

கொண்டாட்டங்கள் சித்திரை மாசம் தொடங்கி வைகாசி மட்டுக்கும் அது கோயில் திருவிழா, வைகாசி சடங்கு என்று இக்காலம் முழுவதும் கொண்டாட்டமாகவே இருக்கும்.

இவர்கள் குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பினை வித்தியாசமான தங்களுக்கே உரித்தான கலாசார நடைமுறைக்குட்பட்டு கொண்டாடி வந்திருக்கின்றனர். ஆனால் அவை இன்று யுத்தம், வறுமை, இடப்பெயர்வு போன்ற இன்னோரன்ன இடர்கள் காரணமாக அவையெல்லாம் ஊனமுற்றுப் போச்சி பாருங்க. இருப்பினும் அவையெல்லாம் கொஞ்சம் துளிர்விடத் தொடங்கி இருக்கிறதோ என எண்ணத் தோணுகிறது.

வருடப்பிறப்பு வந்து விட்டால் பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என ஒரே குதுகலம் தான் பாருங்க. இக்காலத்தில் இவர்கள் கொண்டாடும் விதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாங்கோ.

குறிப்பு: எங்கள் கலையகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த பாரம்பபரிய கலை நிகழ்வுகளின் ஒலி ஒளிப்பதிவுகள்.

நாட்டுக்கூத்து அரங்கேற்றம்.
இஞ்சே கேளுங்கோ, மட்டக்களப்பு என்றாலே கலை அதிலும் கூத்துக்கலை ஞாபகத்துக்கு ஓடி வரும் இல்லையா? இங்கு கன்னங்குடா, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, தேத்தாத்தீவு, கிரான்குளம், வாகரை போன்ற கிராமங்களில் பட்டையைக் கிழப்பும் பாருங்க சும்மா சொல்லி வேல இல்ல. வருடத்துக்கு முன் அதெல்லாம் பழகி வருடப்பிறப்பு தொடங்கி ஒரு வார காலத்தினுள் இவற்றை விடிய விடிய அரங்கேற்றி மகிழ்வர், குறிப்பாக இராம நாடகம், வாழவீமன் கூத்து, பவளக் கொடி சரித்திரம் போன்ற வற்றை கூறலாம். இவை தொடர்ந்து வருகின்ற கண்ணகை அம்மன் சடங்கிலும் இரண்டாம் கலரியில் அரங்கேற்றி நேத்திக்கடன் தீர்க்கும் மரபு இன்றும் காணப்படுகிறது ஓ!. இது போன்றே வசந்தன் கூத்து அரங்கேற்றமும் இடம் பெற்று வருகின்றது.

நடைக்கூத்து.
இன்னொன்று இருக்கு அது, புதவருடம் வந்து விட்டால் மூன்று நான்கு பேர் சேர்ந்து விநோதமாக உடை அணிந்து தெரு தெருவாகச் சென்று வேடிக்கையாகப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டாடும் மரபு இருந்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பின் கிராமப்புறம் சார்ந்து தான் இந் நிகழ்வுகள் அரங்கேறுகின்றமை குறிப்பிடத்தக்கது. புள்ளங்க எல்லாம் அப்பிடியே பின்னால இழுபட்டு போகுங்கள் பாருங்க அது ஒரு சந்தோசம் தான் சா...!.

மகிடிக்கூத்து.
வினோதமான அதுபோல் பார்ப்பதற்கு சுவையான கூத்து இது பாருங்க. குறிப்பாக இக்கூத்து தேத்தாத்தீவில் 1999 இல் கடைசியாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பறை மேளக்கூத்தும் முக்கியம் பெறும். இந்த மகிடி வருடப்பிறப்பினைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஊரின் நடுவினில் கலரி அமைத்து வினோதமாக உடையணிந்து எல்லோரையும் மகிழ்சி ஊட்டீ கொண்டாடுவார்கள். வேதளம் வரும் பாருங்க பாத்தா பயமாத்தான் இருக்கும் ஓ அப்படி சுப்பரா இருக்கும் அது.

கொம்பு முறி.
இது ஒரு பொல்லாத விளையாட்டாம் நான் கண்டதில்ல கேள்விப் பட்டிருக்கன் பாருங்க. இதுவும் ஊர் கூடி கொண்டாடும் விழாவாகக் இந்த வருடப்பிறப்பு காலத்தில் சிறப்பாக இருந்து வந்திருக்கிறகு. வடசேரி தென்சேரி என இரண்டாகப் பிரிந்து பாடி ஆடி கொம்புடைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 'வடசேரியான் கொம்பு எங்கே எங்கே' என்று தொடங்கும் பாடல் மிகவும் அழகாக மெட்டமைந்து இருக்கிறது. ஆக எல்லோரும் ஒன்று கூடி மகிழும் ஒரு உபாயத்தினை நம்மட பழய ஆக்கள் அமைத்து வைத்திருக்கின்றனரே என்று வியக்க தோணுகிறது.

ஊஞ்சல் போட்டு ஆடுதல்.
சாதாரணமாக நாம் நம் வீட்டில் ஊஞ்சல் போட்டாடுவது போல் புதவருடம் வந்து விட்டால் புளிய மரத்தடி ஊஞ்சல், மாமரத்தடி ஊஞ்சல் என எங்கும் ஊஞ்சல் போட்டு ஆடி மகிழ்வுதும் ஒரு கொண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது. 
தந்தனத்தோம் தானத்தோம் 
தந்த நானத்தோம் தானானோம்.
வாருங்கடி தோழியரே நல்ல 
பொன்னூஞ்சல் ஆடிடுவோம்..
என்று பாடி பாடி ஆடுவர் அது என்ன சோக்கு என்று சொல்ல முடியாது பாருங்க.

வார் விழையாட்டு
மறுகாப் பாருங்க இந்த வாரு விழையாட்டு, சில்லுக் கலைத்து விழையாட்டு மறுகா உத்திக்கம்படி அதுபோல கவடி விழையாட்டு என்று சரியான கொண்டாட்டம் தான் பாருங்க. இதெல்லாம் கிழமைக் கணக்கில நடை பெறுமுங்க.

உறவினர் வீடுகளில் விருந்தோம்பல்.
இது எப்படி எண்டா இப்ப மாமி மாமாட வீட்ட பலகாரப் பொட்டிகள், மரக்கறி வகைகள் இதெல்லாம் கொண்டு போய்க் கொடுப்பாங்கள், மறுகா என்ன பண்ணுவாங்கண்டா எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு பெரிய தடபுடலாக விருந்து வைப்பாங்க பாருங்கோ சொல்லி வேல இல்ல. நல்ல கறிய புளியப் புடிச்சி அண்டைக்கு புளளா நல்ல சாப்பாடு போட்டு எல்லா மக்களும் ஒன்றா சேந்து சாப்பிட்டு சந்தோசமா இருப்பாங்க அது உன்மையில் விழாதான். 

இன்னும் எத்தனையோ எத்தனை மாட்டு வண்டி ஓட்டம், கயிறு இழுத்தல், தலகனைச் சமர், வள்ள ஓட்டப் போட்டி, நடன நிகழ்சி என்று எக்கச்சக்கம் பாருங்க. உன்மையா இத விட தமிழனா இருக்கிறத்தில என்ன பெருமை டாப்பா நமக்கு தேவ?? இல்ல கேட்கிறன். அதால தான் பாருங்க வெள்ளக் காரணும் நம்மளப் போல வாழ ஆசப்படுறான், அதில தப்பில்ல தானே பாருங்க ஐயோ ஐயோ..

 வாழ்க தமிழ் வாழ்க நிரந்தரம்

0 comments:

Post a Comment