நெஞ்சினுள் கூடு கட்டி,
நினைவுகள் கோடி வைச்சி,
பஞ்சிபோல் உள்ளே இருக்கும்..
இதயமே!
கண்ணை வைத்து,
காதை வைத்து,
வாயை வைத்து,
வயிற்றை வைத்து
உன்னைக் காட்டும் - இறைவன்,
இதயம் வைத்து,.....
மறைத்து விட்டான் மனதை..
வெற்றுச் சிரிப்பில்,
விழுந்து எழுந்து
கட்டி அணைப்பில்,,,,,
விட்டு மறந்து.....
பட்டதெல்லாம் வேசம்..
தொட்டதெல்லாம் மோசம்...
உன்னைக் காட்டும் - இறைவன்!!
இதயம் வைத்து
மறைத்து விட்டான் மனதை..!
என் கண்ணில் கண்ணீர்....
உன்கண்ணில் உதிரம்!!
என் வயிற்றில் பசி .....,
உன் முகத்தில் கலவரம்..
எனக்கு காச்சல் வந்தால்
உனக்கு தலை வலிக்கும்...
எனக்கு நீ என்றேன்
உனக்கு நான் என்றாய்...
இதயம் கண்டேன்..
உன் செயல்களின்
மறுமொழியில்
கண்களின் உவர் கசிவுகளில்
இதயம் கண்டேன்.
2 comments:
////உன் செயல்களின்
மறுமொழியில்
கண்களின் உவர் கசிவுகளில்
இதயம் கண்டேன்.////
அருமைங்கோ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
நன்றி சுதா....
Post a Comment