ADS 468x60

17 March 2017

என்னாலும் இன்னொருவரை அப்படியே பார்த்து அதேபோன்று வரைய முடியும்.

ஒரு காலத்தில் நானும் ஓரளவு வரை கலையில் வல்லவன்தான். ஆலயங்கள், பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்ற எல்லா இடங்களிலும் என் கைவண்ணம் இருந்தது. என்னால் நிறைய நிறைய போஸ்ட்டர்கள், வன்னர்கள், கலைத் தோரணங்கள் என்றெல்லாம் படைப்புகள் நீண்டு சென்றன.
முந்திய தசாப்தத்தில் எனது பொழுதுபோக்கு சித்திரம் வரைதலாகவே இருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் அதனை மேம்படுத்த போதிய வசதிகள் என்னிடம் இருந்ததில்லை, அதுபோல் எனக்குள் இருந்த இந்த சிறு திறமையை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. அதனால் அது பெரிதாக நிலைக்கவில்லை. இருப்பினும் அது எனக்கு இறைவன் தந்த கொடையாக நினைக்கிறேன். நான் 90ம் ஆண்டுகளில் வரைந்த மகாத்மதகாந்தி. இதுதான் எனது முதல் படம். அதை இங்கு பிரசுரிக்கிறேன்.

0 comments:

Post a Comment