ADS 468x60

17 March 2017

அற்புதம் பல கூறும் கதிர்காம யாத்திரை,


இப்பொழுது அடியவர்கள் எல்லாம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற தலமான கதிர்காமத்துக் வனங்களின் மத்தியால் நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில்இ சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும்இ போரில் வென்றப் பின்னர்இ இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆலயத்தை நோக்கி கதிர்காம யாத்திரை சொல்வது இப்பொழுது ஆரம்பமாகியுள்ளது, அதன்போது பக்தர்கள் பாடும் கதிர்காமக் கந்தனின் 'கழுகுமலைப்பத்து' மிகவும் முக்கியமான கைத்தடியாகும், அதனை தேத்தாத்தீவு இந்து இளைஞர்கள் பாடி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை இங்கு இணைத்துள்ளோம்.

இலங்கைத்தீவின் புனிதப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டிருக்கும் இந்த அழகு நிறை பூமி இந்துக்களால் மட்டுமன்றி ஏனைய அனைத்து மதத்தவர்களாலும் விரும்பி தரிசிக்கப்படுவது சிறப்பாகும்.

ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோஇ வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோஇ துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது.

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போதுஇ தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.

முக்கால் ஏக்கரர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணை கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில்இ இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புணர்ந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. கதிர்காம கந்தனின் பெயர் தமிழ் சமசுகிருத மொழிகளில் உள்ளன. 

அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். ஆகவே இந்த கிடைத்தற்க்கரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அடர்ந்த வனாந்தரத்தின் மத்தியில் நடந்து  கதிர்காமம் செல்லும் அந்த சொல்லமுடியாத ஆனந்தத்தினை அனுபவித்து அருள்பெறுவோமாக.

0 comments:

Post a Comment