இவர் பணியில் செல்ல இலகில்
எவர் உண்டு இன்னும் உலகில்
மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்
துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்
இயற் தமிழ் நல்கும் வல்லுணராய்
இசைத் தமிழ் உயர ஆய்வாளனாய்
நாடகத் தமிழ் நல் ஆசானாய்
கல்வியைப் பொழியும் பண்டிதராய்
எத்தனை எத்தனை அவதாரம் இங்கு
வெள்ளையனின் பிடியில் சிக்கி
வேரறுந்த சமூகத்தில்
எல்லையில்லாக் கல்வியினை
ஏழைக்கம் கிடைக்கும் வண்ணம்
பள்ளிகள் நூறு கட்டி
படிப்பை உயரச் செய்தவர்
சாதிக்கொடுமை சொல்லி
சாவடித்த கல்விச் செல்வம்தனை
ஆதித் தமிழ்க் குடியின்
அறவழியில் வந்தெமக்கு
சாடித் தகர்த் தெறிந்து
சாதனைசெய்த தமிழன்
பாலர்படிக்க பள்ளிகளும்
பயிந் தமிழ் ஓதத் திண்ணைகளும்
மூலைமுடுக்குகள் எல்லாம் நிறுவி
மேலைத்தேயக் கல்விதனையும்
மேதினில் எல்லோர்க்கும் பெற
கல்வியில் சமத்துவத்தினை ஏற்றே
கருத்தோடு எடுத்து வைத்தார்
வாழையடி வாழையாக தமிழ்
வாரிசுகள் எங்கும் ஓங்க
பண்டிதர்க்கும் புலவர்க்கும் பண்ணிசைக்கும்
பாவலரும் சமயக் குரவரும்
ஆசான்களும் அறிஞ்ஞர்களும் அறமூட்டும்
ஆன்மீக வாதிகளையும் ஆக்குவித்தவர்
நூல்கள் பல எழுதி
நுண்ணறிவைப் பரப்பியவர்
சொற்கள் லட்சம் கொண்ட
சொற் களஞ்சியம் உருவாக்கியவர்
பத்திரிக்கை பல தொடங்கி
பாரினில் கல்வி செய்தார்.
எவர் உண்டு இன்னும் உலகில்
மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்
துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்
இயற் தமிழ் நல்கும் வல்லுணராய்
இசைத் தமிழ் உயர ஆய்வாளனாய்
நாடகத் தமிழ் நல் ஆசானாய்
கல்வியைப் பொழியும் பண்டிதராய்
எத்தனை எத்தனை அவதாரம் இங்கு
வெள்ளையனின் பிடியில் சிக்கி
வேரறுந்த சமூகத்தில்
எல்லையில்லாக் கல்வியினை
ஏழைக்கம் கிடைக்கும் வண்ணம்
பள்ளிகள் நூறு கட்டி
படிப்பை உயரச் செய்தவர்
சாதிக்கொடுமை சொல்லி
சாவடித்த கல்விச் செல்வம்தனை
ஆதித் தமிழ்க் குடியின்
அறவழியில் வந்தெமக்கு
சாடித் தகர்த் தெறிந்து
சாதனைசெய்த தமிழன்
பாலர்படிக்க பள்ளிகளும்
பயிந் தமிழ் ஓதத் திண்ணைகளும்
மூலைமுடுக்குகள் எல்லாம் நிறுவி
மேலைத்தேயக் கல்விதனையும்
மேதினில் எல்லோர்க்கும் பெற
கல்வியில் சமத்துவத்தினை ஏற்றே
கருத்தோடு எடுத்து வைத்தார்
வாழையடி வாழையாக தமிழ்
வாரிசுகள் எங்கும் ஓங்க
பண்டிதர்க்கும் புலவர்க்கும் பண்ணிசைக்கும்
பாவலரும் சமயக் குரவரும்
ஆசான்களும் அறிஞ்ஞர்களும் அறமூட்டும்
ஆன்மீக வாதிகளையும் ஆக்குவித்தவர்
நூல்கள் பல எழுதி
நுண்ணறிவைப் பரப்பியவர்
சொற்கள் லட்சம் கொண்ட
சொற் களஞ்சியம் உருவாக்கியவர்
பத்திரிக்கை பல தொடங்கி
பாரினில் கல்வி செய்தார்.
0 comments:
Post a Comment