விலாசங்களை காற்றிலே
பறக்கவிட்டு
உல்லாசம் என்றெண்ணி
மதுவில் சிக்கி
மயக்கத்தில் விக்கி
மடிந்துபோகும் ஆண்களுக்கு
பெண்ணே அடைக்கலம்..
சீவியம் செய்ய
சில்லறைகளை கரியாக்கி
நெருப்பினில் ஆவியாகும்
புகையால் பழுக்கும்
நெஞ்சங்கள்
இருப்பினை தொலைத்து
எங்கெங்கோ திரிகையில்
பெண்ணே அடைக்கலம்.
கோட்பாடுகள் நியாயங்கள்-என்று
நட்புக்கு இக்கணம் எழுதும்
சித்தாந்திகளின்
சித்து விளையாட்டில்
சிக்கி சீதறுண்டு
இதயத்தின் காதுகள்
வசை மொழிகேட்டு
வெடிக்கும் வேளை
பெண்ணே அடைக்கலம்.
சிறிய மனதின் பைக்கட்டுக்குள்
குடும்பத்தின் இரும்புச் சுமைகள்
சமூகத்தின் சாக்கடைகள்
இவற்றுடன்,,,,
உதட்டில் மட்டும் புன்ன்டுகைத்து,,,,,
உள்ளத்தால் சூட்டுக்கோல் வைக்கும்
செங்காட்டுப் புலியவள்
காட்டுக்குள்ளும்
பெண்ணே அடைக்கலம்......
0 comments:
Post a Comment