ADS 468x60

11 March 2010

நாளைய தலைவர்கள்........

வேலென எழுந்து
வில்லென நிமிந்து
புலியெனப் புறப்படு!
நீ ஒரு நெருப்பு!
யாரும் உனக்கில்லை எதிரி
எடு !எடு! கல்வியில் உதிரி

கல்லென இறுகி
கல்வியில் உருகி
நேர் வழிகாட்ட துணிந்து செல்!
நீ ஒரு புயல்!
உனக்கிங்கில்லை தடை
வாழ்கையில் இடர்களை உடை!

கிணற்றுத் தவளையாய் கிடவாதே!
இன்ரநெற்றில் கதைபேசி
ஈமெயிலில் உறவாடி
சற்றிங் செய்து சுற்றி விளையாட
கம்யுட்டர்குள் சென்று
காற்றில் பறக்கும் உலகமடா..

பழந்தரும் திராட்சை செடிகளே!
மணந்தரும் மல்லிகைக் கொடிகளே!
நில்லாதே ! ஓடு! முன்னேறு!
சொல்லாதே ! நீ முடியாதென்று
முடங்கிய பொருளாதாரத்தின்
திறவுகோல்களே!
வேலையின்மையைக்
களையெடுக்கும் வேங்கைகளே!
பாதாளத்தில் படுக்கும்
இலங்கைக்கு முண்டு கொடுக்கும்
முன்னோடிகளே!

உங்களை எங்கள்
மனதில் வெள்ளை விரித்து
புன்னகைப் பூச்சொரிந்து
அன்பினைப் பாலாய் பரிமாறி
முன்னேறி செல்ல வாழ்துகிறோம்.....

0 comments:

Post a Comment