
புள்ளங்கள படிப்பிச்சு ஆளாக்கணும்இ இந்த பக்கத்தில நாங்களெல்லாம் மாட உளச்சி உளச்சி தேஞ்சி போனதுதான் மிச்சம். என்ட புள்ளங்களாச்சும் படிப்பிச்சு இஞ்சால பக்கத்து சனங்கள நல்லா படிப்பிக்க வைக்கணும். நாங்க பட்ட துன்பம் எங்களோட போகட்டும் இந்தக் குஞ்சுகளயாச்சும் உருப்படியாக்கணும்' என்று தம்பிராச தனது நிலைபற்றி பேசினார்.
சில்லிக்கொடியாறு கொக்கட்டிச்சோலைக்கு தெற்கே இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். அங்கு 5 குழந்தைகளுடன் வாழ்து வரும் இவர் தங்களது வாழ்வாதாரமாக வயற்செய்கைஇ பசு வளர்த்தல் என்பனவற்றை செய்து வருகின்றனர். மூத்த பெண் திருமணம் செய்து விட்டார். ஏனைய அனைவரும் கல்வி கற்று வருகின்றனர்.
யுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.



