ஓ போகிறாயா ஆண்டே!
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே,
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம்
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே,
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம்
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.
கொடுத்துச் சிவந்த கரங்கள்
எடுத்துப் பணிந்த முகங்கள்
சிரிப்பை சேர்த்த பைகள்
சிறப்பாய் கோர்த்த மைகள்
உறவுகள் போட்ட பாலங்கள்
உணர்வுகள் தேடிய உதவிகள்
தேடித் தோர்த்த பொழுதுகள்
தேடாமல் கிடைத்த பரிசில்கள்
இன்னும் அடுக்கிக் கொள்ளும்
அந்தப் பொழுதுகளில்....
எடுத்துப் பணிந்த முகங்கள்
சிரிப்பை சேர்த்த பைகள்
சிறப்பாய் கோர்த்த மைகள்
உறவுகள் போட்ட பாலங்கள்
உணர்வுகள் தேடிய உதவிகள்
தேடித் தோர்த்த பொழுதுகள்
தேடாமல் கிடைத்த பரிசில்கள்
இன்னும் அடுக்கிக் கொள்ளும்
அந்தப் பொழுதுகளில்....
நன்றியை மட்டும் இழுத்துக்கொண்டு
புதிய ஆண்டே !
இன்னும் உண்ணவும் வழி இழந்த
எமது மக்களின் விடிவுக்காய்
உன்னை வரவேற்று
வாழ்த்துகிறேன்..
மூன்று வருடத்துக்கு முன் புதுவருடத்தினை வரவேற்று எழுதிய கவிதை ஒன்று.
0 comments:
Post a Comment