ADS 468x60

17 January 2017

மரண உத்தரவாதத்துடன் 1732 போ்!


இன்று ஒரு பத்திரிகைச் செய்தி இலங்கையில் எயிட்ஸ் நோயினால் மரணம் உத்தரவாதப்படுத்தப்பட்டவர்கள் என 1732 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான மாற்று மருந்து கண்டு பிடிக்கப்படாதவரை இந்த மரண உத்தரவாதத்தினை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

எமது சமுகம் மற்றும் மக்களின் உளப்பாங்கு என்பன ஆண் பெண் ஆகிய இரு பாலாரிடையேயும் இந்த நோய் அறிகுறிகள் தோன்றும் போது அதை பயத்தில் மூடிமறைக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையில் 3600 இருந்தவருவதாகயும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தாங்களாக முன்வந்து அவற்றுக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில்லை. இதனால் அவர்களிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவும் அபாயமும் இருந்து வருகின்றது.

இந்த நிலை பாதிக்கப்பட்டவர்களின் உடல், உள மற்றும் பொருளாதார நிலையை மோசமடைய வைப்பதுடன் அவர்களை மரணத்தின் வாசலுக்கு விரைவில் அழைத்து வருவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகில் 1981 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை உலகம் எங்கும் இந்நோயால் அவஸ்த்தைப்படும் மக்கள் தொகை 35 மில்லியனாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

0 comments:

Post a Comment