கால் கழுவ களனிக்காடு
கண்டு மகிழ களத்து மேடு
பால் நிறைந்த வெள்ளைக் கதிர்
பருவம் வந்தால் தின்னும் புதிர்
வில்லுக் குளத்து வீச்சிமீன்
விடியக் கிளம்பும் சூரியன்
பல்லுத் தீட்ட ஆலங்குச்சி
பக்கத்து கோயில் மணி
குளக்கரையில் கூவும் குயில்
கிழக்குவெளிக்க கிழம்பும் கிளிகள்
மண்ணை வருடும் மாமரம்
தென்னை கொத்தும் மரங்கொத்தி
இத்தனையும் இழந்தவனாய்
செத்தவன் போல் கிடக்கிறேனே
ரெத்தமும் சதையுமாக உயிர்
சித்தத்தில் கலந்த நாடே
ஊழ் வினைகள் பட்டவர்போல்
ஊரறுந்து கிடக்கின்றேனே!
வாழ ஒரு நாளக் கொடேன்
வந்து உன்னை அள்ளுகிறேன்.....
கண்டு மகிழ களத்து மேடு
பால் நிறைந்த வெள்ளைக் கதிர்
பருவம் வந்தால் தின்னும் புதிர்
வில்லுக் குளத்து வீச்சிமீன்
விடியக் கிளம்பும் சூரியன்
பல்லுத் தீட்ட ஆலங்குச்சி
பக்கத்து கோயில் மணி
குளக்கரையில் கூவும் குயில்
கிழக்குவெளிக்க கிழம்பும் கிளிகள்
மண்ணை வருடும் மாமரம்
தென்னை கொத்தும் மரங்கொத்தி
இத்தனையும் இழந்தவனாய்
செத்தவன் போல் கிடக்கிறேனே
ரெத்தமும் சதையுமாக உயிர்
சித்தத்தில் கலந்த நாடே
ஊழ் வினைகள் பட்டவர்போல்
ஊரறுந்து கிடக்கின்றேனே!
வாழ ஒரு நாளக் கொடேன்
வந்து உன்னை அள்ளுகிறேன்.....
0 comments:
Post a Comment