மாணவர்களிடையே கடமை, அறம், விழிப்புணர்வு மற்றும் ஆழுமைப்பண்பு ஆகியவற்றை வளப்படுத்த சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது. அவர்களுக்காக எமது நேரத்தினையும் உள்ள திறனையும் பகிர்ந்தளித்தல் எமக்கெல்லோருக்குமுள்ள தார்மீக பொறுப்பாகும். அதை நான் என்னால் முடிந்தவரை நெடுங்காலமாக செய்து கொண்டு இருக்கின்றேன். ஈதல் அறம், என்பதற்கிணங்க மற்றவர்களுக்காக எமது நேரத்தை, பணத்தினை, மற்றும் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருவது எவ்வளவு அறம்பாற்பட்டது என்பதனையும் இன்னொருவருக்கு வழங்கிக்கொண்டிருப்பதே இன்பம் என்பதை வள்ளுவர் ஈதல் இன்பம் எனவும் கூறியிருப்பது, நாம் நமக்காக மாத்திரம் வாழாமல் பிறருக்காகவும் வாழ தலைப்படும்போதே நாம் அறவாழ்வுக்கும் நுழைகின்றோம்.
வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாாியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாள் நிகழ்வின் போது (25) வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின்போது 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தொிவான ஐந்து மாணவா்களையும் 5ம் ஆண்டு புலமை பாிட்சையில் சித்திபெற்ற மாணவனுக்கும் அறநெறியில் ஆக்கத்திறன் போட்டியில் பிரதேச மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் தொிவுசெய்யப்பட்ட மாணவிக்கும் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் மு.கணேசராசா அவர்களுடன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்த சந்தர்ப்பம்.
'ஈதல் அறம்' எனும் தலைப்பில் என்னுரையினை ஆற்றக் கிடைத்தது. ஈதல் இன்பம், ஈதல் அறம், ஈந்துவத்தல் போன்ற சொல்லாட்சிகளினால் வள்ளுவர் ஈந்துவக்கும் அறம்பற்றி சொல்லியவற்றை கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஈந்துதவும் அனைவரினையும் உட்படுத்தி பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் கிடைத்த சந்தர்ப்பத்தை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றினை தெரிவித்து. எமது பிள்ளைகளின் கல்வியை எல்லா வகையிலும் ஊக்குவிக்கும் செயற்பாட்டுக்கு துணைநிற்க்க சங்கற்ப்பம் பூணுவோம்.
0 comments:
Post a Comment