"மட்டு மா நகரை மீன் பாடும் போது, ஏன் நான் பாடக் கூடாதா!' என்ற நட்பாசை தான்...இது எனது நீண்ட நாள் ஆசை. மிக சில தொழில் நுட்ப்பங்களை மட்டும் கொண்டு இன்பனின் மதுரக் குரலில் என் செல்ல மருமகள்மார்களுடன் இதை முடித்து இருக்கிறேன்....
29 April 2011
25 April 2011
முகம் பார்க்க ஏங்கும் மூட்டுவலி
தூரல் நின்ற வானம்
அலைகள் ஓய்ந்த கரை
வேகம் சாய்ந்து,
சோகம் தோய்ந்த,
இவன் சங்கற்ப்பங்கள்,
இப்போ........
பூக்களின் வாசத்தில்...
வண்டுகளின் ஓசையில்....
மீன்களின் துள்ளல்களின்...
நடுவில்...
கரைகளில் தவழும்....
நெஞ்சக்கனத்துடன்....
பரவசப்படும் நான்..
நான் அல்ல...
காது வழியால்- ஒரு
புதிய நுழைவு- என்
நெஞசத்தின்
இடம் நிரப்பி.......
வேலிகள் உடைக்கும்
சந்தோசம் இருந்தும்,,
முகம் பார்க்க ஏங்கும்
மூட்டு வலியில் நான்.........
படுக்கை மறந்து
பரிதவிக்கிறேன்..
16 April 2011
சித்ரா பௌர்ணமி
மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும்இ சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடித்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்துஇ சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.
பழங்காலத்தில்இ சித்ரா பவுர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டிஇ அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள்.
இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை.அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடிஇ பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.
அன்றைய தினம் பல்வேறு கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. எங்கும் அதிகமான கூட்டம் காணப்படும். புராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ, புணணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்த நாளும் இன்றுதான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்ப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்
12 April 2011
மட்டக்களப்பு மக்களின் சித்திரை வருடம்-
11 April 2011
இது தான் தமிழர் புது வருடமா?.....
தமிழர்களின் உண்மையான வருடம் எது?
தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.உன்மையில் இந்துக்களின் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகின்றது.
தொன்மை கொண்ட சித்திரை.
'திங்கள் பன்னிரண்டு என்பதும், அவற்றுள் தை, மாசி, பங்குனி, கார்த்திகை முதலிய மாதப் பெயர்களைச் சங்கப் பாடல்கள் குறிப்பதனாலும் ஓர் ஆண்டில் சித்திரைத் திங்கள் முதற்கொண்டு பங்குனி ஈறாக எண்ணும் தமிழ் ஆண்டின் மாதப் பெயர் வழக்கும் பழமையானவை என்பது போதரும்' என்பார் பேரா.சண்முகம் பிள்ளை.எனவே கடந்த 2000 ஆண்டுகளுக்கும் குறைவில்லாமல் சித்திரை முதலான மாதங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது தெளிவு.
06 April 2011
புலிபாய்ந்த கல்லை ஊடறுத்து ஒரு தமிழ் கிராமம்...
தமிழர்களின் பண்பாடு பொதுவாக மற்றவர்களை வியந்து பார்க்கும் அளவுக்கு அன்பால் அனுசரிக்கும் தன்மையை கொண்டது. இலங்கையில் பொதுவாக செறிவாக தமிழர்கள் வாழுகின்ற இடங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் குறிப்பிடத்தக் ஒன்றாகும். இங்கு அனேகமான மக்கள் அகலப் பரந்து கிடக்கும் வளங்களைப் பயன்படுத்தி தங்களது புராதன முறைகளினூடு உழைத்து வாழும் ஒரு நாகரிக மரபுக்குள் வாழும் பண்பு தனி அழகு. இவர்கள் உன்மையில் மறவர்கள், போராடும் குணம் படைத்தவர்கள் அந்த போராட்டம் வறுமையாக இருக்கட்டும், இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும், விலங்குகளின் அச்சுறுத்தலாக இருக்கட்டும் அவற்றுக்கு எதிர்த்து போராடியே வாழும் இவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
வெள்ள அனர்த்தத்தின் பின் மக்களின் உணவுத்தேவை அதன் பாதுகாப்பு பற்றி எல்லாம் உலக உணவுத்திட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மதிப்பீட்டு நடவடிக்கையில் நானும் கலந்து கொண்டிருந்தேன். மாவட்டத்தின் வடக்குப்பறத்தில் அமைந்து காணப்படும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் இரு தசாப்த கால வன்முறை, ஆட்கடத்தல் மற்றும் இன்னோரன்ன நெருக்கடிகளுக்குள் இருந்து மீண்டும் மீளமுடியாத நிலையில் மலையடி வாரங்களிலும், காடுகளுக்கிடையிலும் ஒதுக்கப்பட்ட ஒரு சமுகம் போன்று வாழ்ந்து வரும் எம்மினத்தை காண ஒரு வாய்ப்பு கிட்டியது. எனக்கு ஏதோ வேறு ஒரு நாட்டில் நிற்ப்பது போன்று ஒரு பிரமை அப்படி மாறுபட்ட சூழல், மக்கள், தொழில் அத்தனையும் என்னை மொத்தமாக வியப்பூட்டியது.
சந்திவெளி பிரதேசத்தினை ஊடறுத்து புலிபாய்ந்த கல் ஊடாக ஈரலைக்குளம் எனும் குக்கிராமத்தினை எமது குழுவினர் சென்றடைந்தனர். போகும் வழியெங்கும் அத்தனை அழகு, தொப்பிக்கல் மலை, குடிம்பி மலை மற்றும் டோறா வோறா மலைத்தொடர் என அனைத்தையும் கடந்து சென்றோம்.
இந்த பிரதேச செயலக பிரிவுக்குள் மட்டும் 78344 பேர் அண்மைய வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப் பட்டிருந்தனர். இங்கு மக்கள் பொதுவாக் காடுகள், சேனை, வயல் நிலங்கள், புட்தரைகள் போன்ற வளங்களை கொணடடுள்ளனர், இவை தான் அந்த மக்களுக்கு அரன். தவிரவும் அவர்கள் பழக்குப்பட்ட இயற்கையோடு இயைந்த வாழ்க்கை இவை யெல்லாம் அவர்களை ஆசை கொள்ள வைத்திருக்கும் வளங்கள் என்றால் மிகையில்லையே!..
இந்த ஈரலைக் குளம் 29 குக்கிராமங்களைக் கொண்ட ஒரு கிராம சேவகர் பிரிவாகும், இங்கு 424 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என கிராம சேவகர் திரு வீரசிங்கம் சொன்னார். ஆனால் 19 கிராமங்களில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர் எனவும் கூறினார். போகும் வழியில் இலுக்குப் பொத்தான எனும் இடத்தில் மதிப்பீட்டக்கு வந்தோம் மிகவும் வறுமையில் வாடும் ஒரு குக் கிராமம், இங்கு கூலி வேலை செய்வோர் அதிகமாகக் காணப்படுகின்றனர், பெண்கள் கூட அனேகமாக கூலி வேலை செய்கின்றனர். காரணம் கணவனை இழந்த பெண் விதவைகள் அதிகம் காணப்படுகின்றனர்.
(இலுக்குப் பொத்தானை மக்களும், மாக்களும் குளிப்பாடும் நீரேரி)
குடிப்பதற்கு குளிப்பதற்க நீர் இல்லை வாய்க்கால் தான் எல்லாவற்றுக்கும். மாடுகளும் அங்கே மனிதர்களும் அங்கே...அதனால்; பார்ப்பதற்கு வெளியில் அசிங்கமாகவே இருக்கின்றனர் ஆனால் உள்ளுக்கு தங்கமான மனசி.
'படிக்க விட்டால் யார் என் இளய மகளுக்கு பால் ஊட்டுவது' என மனைவிலை இழந்த குடும்பத்தலைவர் செ.சின்னத்துரை என்னை பார்த்து கேட்டார். ஊழைத்து உழைத்து தனது உடல் ஓடாய் இருந்தது. இவர் 5 பிள்ளைகளுக்கு பொறுப்பு வாய்ந்த தாய், தகப்பன் எல்லாமாகவும் இருந்தார். விறகுவிற்பதையே தொழிலாகக் கொண்ட இவர் வேறு கூலி வேலைகளுக்கும் செல்வதுண்டு. இவர்கள் 2003 இல் தனது சொந்த மண்ணை விட்டு மாவடிவேம்பில் இடம்பெயர்ந்து இருந்த போது குழந்தைப் பிரசவத்தின் போது தனது மனைவியை இழந்து குழந்தையை மட்டும் உயிருடன் கடவுள் கொடுத்தான்.
(சின்னத்துரை அவர் மகள் வெள்ளையம்மாவுடன்)
சின்னத்துரையிடம் முதாலில் தர்சினியின் அம்மா எங்கு என்று கேட்டபோது வெள்ளையம்மாவை தான் காட்டினார் ஆச்சரியமாக இருந்தது.
'எனக்கு பள்ளிக்கு போறன்டா சரியான விருப்பம் அண்ணா ஆனா அம்மா செத்த பிறகு தர்சினிப் பிள்ளையை வளக்க யாரும் இல்ல அதால தான் நான் 2 வருசம் பள்ளிக்கு போக முடியல்ல, இப்ப 2 வருசம் பிந்தி பாடசாலையில சேத்தாங்கள்' என்றாள் சின்னத்துரை வெள்ளையம்மா எனும் இந்த கள்ளமற்ற குழந்தை தாய்
ஆந்த இடத்தில் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் என்னால் கூறக் கூடியதாய் இருந்தது ஆசை வார்த்தை காட்டி அரசியல் வாதிகள் போல் மோசம் செய்ய நான் விரும்மவில்லை. எமது தமிழ் இனம் இப்படியும் இருப்பது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே என்று வருத்தப்பட்டேன். இதை நீங்களும் தெரிந்து கொள்ளனும் என இதை யாத்திருக்கிறேன்.
(பிள்ளை வெள்ளையம்மா குழந்தை தர்சினியுடன்)
வசதி இருத்தும் படிக்காத பிள்ளைகளுக்குள் இந்த சிறிய குழந்தை சிறிய குழந்தையை மட்டும் சுமக்கவில்லை வறுமை, பட்டினி, பாதுகாப்பு இன்மை, ஓரங்கட்டுதல், இது போன்று இன்னும் இன்னும் சுமைகளுடன் வாழும் இவளால் படிக்க இருக்கும் ஆர்வத்துக்கு யார்தான் கை கொடுப்பார்!
இவள் போன்று எத்தனையோ வெள்ளையம்மாக்கள் எம் இனத்தின் புத்தி ஜீவிகளே விழித்தெழுங்கள் இன்னும் இன்னும் இலுக்குப் பொத்தானை கிராமங்கள் உருவாகும் பரிதாபம் எமது உறவுகளுக்கு ஒரு சாவக்கேடாக இருப்பதை களைந்தெறிய கை கோர்ப்போம். இப்படி நிலமை இருக்க 'மித மிஞ்சிய வறுமையையும், பட்டினியையும்' ஒழிக்கின்ற மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை இலங்கையினால் அடைய முடியுமா என்கின்ற கேள்வி தொக்கு நிற்கிறது அல்லவா?
(வெள்ளையம்மாவுடன் நானும்)
1990க்கும் 2015க்கும் இடையில் தேசிய வறுமைக்கோட்டை விட குறைந்த வருமானத்தை கொண்டுள்ள மக்களின் கதவீதத்தை அரைவாசியாக்குதல், அதுபோல் பெண்கள் மற்றும் இள வயதினர் உட்ப்பட சகலருக்கும் முழுமையானதும், உற்ப்பத்தி திறனிலாலானதுமான தொழிலையும், மற்றும் கௌரவமான வேலையையும் பெற்றுக்கொடுத்தல், 2015க்குள் பட்டினியிலிருந்து துன்ப்பப்படும் மக்களின் சதவிகிதத்தை அரைவாசியாக்குதல் என்பன் இந்த வெள்ளையம்மாக்கள் வாழுகின்ற இலுக்குப் பொத்தானை கிராமங்களையும் சேத்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை நடக்குமா என்பது ஆண்டவனுக்கு மாத்திரம்தான் வெளிச்சம்..
03 April 2011
கிரிகட் பெற்றோளின் விலையை சரிக்கட்டுமா?
உலகம் மாயையால் ஆனது என சித்தாந்திகள் சொல்லுவது என்னவோ உன்மை தான் எனத் தோணுகிறது. ஏனென்றால் சாதாரண மனிதர்கள் இலகுவில் மாயையில் அகப்பட்டு விட்டால் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட அந்த மாயைக்குள் அகப்பட்ட பின் அறியார்கள். உலகம் எனும் மாயைக்குள் அதிலும் 11 பேர் விளையாடும் கிரிக்கட் எனும் மாயைக்குள் 20 மில்லியன் மக்களின் கண்கள் கட்டப்படும் அந்ந தினம் அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது போலும். அந்த நாளில்தான் அதுவும் முட்டால்கள் தினத்தில்தான் நாம் எல்லோரும் விலைச் சுமையை சுமக்க வைக்கப்பட்டுள்ளோம், என சிலர் சிலாகித்துக் கொள்ளின்றனர்.
அதுதான் பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிப்பது. குறிப்பாக ஏப்ரல் 1ம் திகதி நள்ளிரவில் இருந்து 1 லீற்றர் பெற்றோளின் விலை 10 ரூபாவினாலும், 1 லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 1890 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது பலரதும் விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
உலகக் கிண்ணம் மக்களின் உள்ளங்களில் உஸ்னத்தினை ஏற்படுத்தி அந்த உஸ்னம் நாடுகளுக்கிடையில் மாத்திரமல்ல, கணவன் மனைவிக்கு இடையில் கூட பல சர்ச்சைகளையும் விரிசல்களையும் ஏற்ப்படுத்தும் அளவுக்கு மக்கள் சோறு தண்ணியைக் கூட மறந்து ஏப்பரல் 1ம் நாள் வெள்ளிக் கிழமையே தயாராகி இருந்தனர். அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்கள் என ஏராளம் ஏராளம்... இவர்கள் கிரிக்கட்டில் மாத்திரம் தான் தங்கள் முழுக்கவனத்தினையும் வைத்திருந்தனர்.
இவற்றை நாடி பிடித்த அரசியல்வாதிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் யாருக்கும் தெரியாமல் பெற்றோலின் விலையையும் ஏற்றி விட்டனர் அல்லவா. மக்கள் யாரும் இதை கண்டு கொள்ளமுடியாமல் அந்த பொறி வைக்கப்பட்டுள்ளது என சில புத்திஜீவிகள் அங்கலாய்ப்பதனைக் காணலாம்.
உலக மட்டத்திலான பெற்றோல் விலை உயர்வு.
உலகலாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் எண்ணை விலை மாற்றம் தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் மாற்றத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது என சிலர் கூறுகின்றனர். இது குறிப்பாக சிங்கப்பூர், ஜேர்மனி, மலேசியா போன்ற நாடுகளிலும் கூட விலை அதிகரிப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அண்மையில் பெற்றோலிய துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதற்க்கிணங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நஸ்ட்டம் அவர்களின் பிழையான முகாமைத்துவத்தினாலன்றி உலகலாவிய சந்தையில் ஏற்ப்பட்ட விலைகளாலல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர் இப்போது சண்டே டைம்சிக்கு தெரிவிக்கையில் அவர்கள் மானியங்கள் மூலமாக பாரிய இழப்பினை சந்தித்து வந்தமையால் தான் இவை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுடனான ஒரு ஒப்பீடு.

சிலர் கூறுகின்றனர் அதென்ன உலகச் சந்தையில் பெற்றோலின் விலை, தங்கத்தின் விலை எல்லாம் கூடுகிறது பின்ப குறைகிறது. ஆனால் கூடும் போது மட்டும் கூட்டும் இந்த அரசாங்கம் ஏன் குறையும் போது மட்டும் அது பற்றி கண்டு கொள்வதில்லையே என விசனம் தெரிவிப்பதனையும் காணலாம்.
ஆனால் இவை உலக சந்தையில் ஏற்ப்பட்ட விலை அதிகரிப்பினால் இல்லை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்ப்பட்ட நஸ்ட்டத்தினை சீர் செய்யவே எனக் கூறுவதை ஏற்க்க முடியுமா? இல்லை ஏனென்றால் மக்களிடமும் ஒரு லீற்றருக்கு 25 விகிதம் பணம் வரியாக அறவிடப்படுகின்றதே இந்த இழப்பீட்டை எங்கு சென்று கேட்பது??? அது தான் ஒருமுறை நீதி மன்றத்தினால் கூட இந்த பெற்றோலின் விலையேற்றம் மக்களின் உழைப்பை வரியாகக் கேட்க்கக் கூடாது என்று தீர்ப்பளித்தும் அது அரசியல் பலத்தின் மூலம் செல்லாக் காசாகிப் போனது அனைவருக்கும் தெரிந்ததே.
எது எவ்வாறு இருப்பினும் இது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தினை முழுதாகக் குறைத்துவிடும் என்ற அச்சம் பரவத்தொடங்கி விட்டது. இந்த விலையேற்றம் சில்லறைக்கடை இருந்து தேனீர் கடை ஈறாக தாக்கத்தினை ஏற்ப்படுத்தி எல்லா அடிப்படைப் பொருட்களிலும் மாற்றத்தினை ஏற்ப்ப:த்தி குடும்ப நிலைலை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோணுகிறது.
இருப்பினும் புத்திஜீவிகள் ஆய்வு ஆர்வலர்கள் பெற்றோலிய மாற்றீட்டுப் பாவனை பற்றி கரிசனை செலுத்தும் உபாயங்களை ஆய்ந்தறியத் தலைப்படவேண்டும் அவை வரவேற்ப்புக்கு உரியதாகவே அமையும்.
ஆகவே கிரிக்கட் உலகக் கிண்ணம் வெல்லப்பட்டு இருப்பின், இதன் வெற்றி, சித்திரைப் புதுவருடம் என ஒரு மாதம் உருண்டோடி இருக்கும் இந்த மாற்றம் என்னவென்றே தெரியாமல் ஓடி மறைந்து இருக்கும். ஆனால் கணிப்பு பிழைத்திருக்கும் இன்நிலையில் பல்வேறு அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து மீழ முன்னர் இன்னொரு அனர்த்தம் மக்களின் மனநிலை மாற்றத்தில் என்ன வகையான பிரதிபலிப்புகளை கொண்டுவர இருக்கின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.