01 June 2026
பொருளாதாரக் கடலில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எமது தேசத்தின் பொருளாதாரக் கப்பல்
"ஒரு கப்பல் துறைமுகத்தில் இருப்பது பாதுகாப்பானது என்றாலும், கப்பல்கள் வெறும் துறைமுகத்திலேயே தங்குவதற்காக உருவாக்கப்படவில்லை" என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் பொன்மொழியுடன் இன்றைய எமது உரையாடலைத் தொடங்க விழைகின்றேன். ஆம் உறவுகளே, கப்பல்கள் கடலில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவை. அவ்வாறு அவை அலைகடலில் பயணம் செய்யும்போது, எதிர்பாராத பேரழிவுகளையும், கொடிய புயல்களையும் சந்திப்பது தவிர்க்க முடியாதது. உலகிலேயே மிக உன்னதமான அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் நிறைந்ததாக மார்தட்டிக்கொண்ட 'டைட்டானிக்' என்ற பிரம்மாண்டமான கப்பல் கூட, கடலின் நடுவே ஒரு பனிப்பாறையில் மோதி அடியாழத்திற்குள் மூழ்கிப் போனதை வரலாறு நமக்குக் கற்றுத்தந்துள்ளது. ஒரு maபெரும் கப்பலையே பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியாத தொழில்நுட்பம் எமக்குக் காட்டும் பாடம் என்னவென்றால், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும்போது, வெறும் வெற்றுப் புள்ளிவிபரங்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது; மாறாக, நெருக்கடி முகாமைத்துவம் (Crisis Management) குறித்த மிகவும் ஆழமான புரிதலும், நுணுக்கமான கள ஆய்வும் எமக்கு இருக்க வேண்டும் என்பதுதான்!

