
இந்தா வந்திட்டன் பொறுமா
இறங்கி வடிச்சி வாறன்
இறால்க் கூனி சுங்கான்
வறால் கெழுத்தி செல்வன்
மூத்த பிள்ளை நான்தான்
முழுதும் சுமக்கும் பெண்தான்
வீட்டுக்குள்ள இருந்தா
வெறும் பானை சோறிடுமா?
அச்சம் காட்டி என்னை
அறைக்கு உள்ளே பூட்டாதே
பயந்து போகும் மானைத்தான்
பாய்ந்து பிடிக்கும் புலி
நான் மானல்ல ஓட
மறுபடியும் பாயும் வேங்கை
0 comments:
Post a Comment