அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்
இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.