ADS 468x60

27 February 2016

கொம்புச் சந்தியானே!

தேத்தா மரத்து ஓரத்தில
தீர்த்தக் குளத்து ஈரத்தில
கொம்பு முறித்து ஆடினோமே வெள்ளையப்பா- அங்கே
கொம்புச் சந்தியான் அருள்தான் கொள்ளையப்பா

நம்பிவரும் மனிதருக்கு தும்பிக்கையான் துணையிருப்பான்!
நாடிவரும் கயவருக்கும் நல்லருளை புரிவானே!
வந்தவங்க வரம் குறைந்து போனதில்லே!
எங்க ஊரினிலே கலையின் பேரினிலே
எல்லாமே ஆனைமுகன் அருள் ஒளியின் ஊற்றம்மா!
ஏங்கித் தவிக்கும் மனதை இங்கே ஆற்றம்மா!

மீன்பாடும் தேனாட்டில் தேனூரில் குடியமர்ந்தாய்
நான்பாட நாவிருந்து நல்லருளை நீதந்தாய்!
அற்புதங்கள் நாளுக்கு நாள் செய்தாயே!
வில்லுக் குளக்கரையில் வில்வ மரத்தடியில்
ஆனாகப் பட்டவரெல்லாம் அறிவைப்பெற்று போனாங்க
பாவம் நீங்கிப் பக்குவமாய் ஆனாங்க-
---------------------------------------------------------------------
//இங்கு அழகுற அமர்ந்து எமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் கொம்புச் சந்தியான் அப்பனுக்கு எனக்கு சமர்ப்பணம்//

0 comments:

Post a Comment