ADS 468x60

27 February 2016

யார் மன்னன்?


உணவை ஊருவாக்கி
வளத்தை வருவாயாக்கி
களத்தில் காத்து நிற்ப்பவன்
நீயும் ஒரு குறுநில மன்னன்
சேறு பறக்கும் நிலத்தில்
ஏரு பூட்டி விதைப்பவன்
ஆறு தரும் நீரைவைத்து
அறுவடை பண்ணுபவன்
வேறு வளம் சேர்பவர்க்கு
சோறு கொடுத்து உதவுபவன்
நெற்றி வியர்வை சிந்தி
நிலம் விளைப்பவன்
படைப்பதால் நீயும் ஒரு பிரம்மா
அவன் உலகைப் படைக்கிறான்
நீ உணவைப் படைக்கிறாய்
நீ விளைத்தால்தான் எமக்கு சோறு
நீ இழக்கும் போது உனக்கு யாரு

0 comments:

Post a Comment