
வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கடந்த வாரத்தில்; பசில் ராஜபக்ஷ அவர்களை தலைமைதாங்க, நாட்டில் சமூக முன்னேற்றம் மற்றும் அதன் நலத்திட்டங்களின் தாக்கத்தைக் கண்டறிய சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.
இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.
இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.
1994 ஆம் ஆண்டில், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயமாக அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் சமுர்தி (செழிப்பு) திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் சமுர்தி அமைச்சும் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் இதேபோல் திட்டத்தின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், அதன் ஆரம்ப அனுபவங்களின் அடிப்படையில் அணுகுமுறையை மேலும் தீவிரப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.