ஒருவரின் தேவைக்கு அதிகமாகச் சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எரிபொருளும், இன்னொருவரின் வாழ்வாதாரத்தைத் திருடும் ஆயுதம் என்பதைப் புரிந்துகொள்வோம்.
"மனதின் தேவையற்ற சஞ்சலமே, மனித அமைதியை அழிக்கும் மிகப்பெரிய சத்துரு" என்று மகான் ஆதி சங்ராச்சாரியார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்தார். இன்று எமது தேசத்தின் வீதிகளில் மீண்டும் தென்படும் அந்த நீண்ட வரிசைகளையும், மக்களின் முகங்களில் அப்பியிருக்கும் அந்தப் பீதியையும் பார்க்கும்போது, ஆதி சங்ராச்சாரியாரின் அந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன. இன்று நான் உங்களோடு பேசுவது ஒரு அரசியல் மேடையிலிருந்து அல்ல; உங்கள் ஒவ்வொருவரினதும் வீட்டு முற்றத்தில் நின்று, உங்கள் வலிகளையும், உங்கள் உள்ளத்தில் ஓடும் நியாயமான பயத்தையும் முழுமையாக உணர்ந்த ஒரு சகோதரனாக, ஒரு தந்தையாக, ஓர் ஆழமான உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே நான் வந்திருக்கிறேன்.

