
இரவின் கண்ணீர்
பனித்துளியாகும்
முகிலின் கண்ணீர்
மழைத்துளியாகும்
இயற்கை அழுதால்
உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால்
இயற்கை சிரிக்கும்.
அன்னையின் கையில்
ஆடுவதின்பம்
கன்னியின் கையில்
சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால்
உன்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால்
பெரும் பேரின்பம்..
0 comments:
Post a Comment