ADS 468x60

30 July 2023

மன்றம் ஆழும் மன்னா வா!

 
மக்கள் உணர்வை சீர்தூக்கும்

மன்றம் ஆழும் மன்னா வா

திசைகள் நாலாய் இருந்தாலும்

ஒருமை வேண்டும் மன்னா வா

மன்னா வா மன்னா வா 

14 July 2023

மக்களை மயக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்

மைக்ரோ ஃபைனான்ஸ் அல்லது மைக்ரோ கிரெடிட் என்று ஒரு கருத்து உலகில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் தோன்றியது. அதன் அடிப்படை யோசனை மக்களுக்கு கடன் கொடுப்பதாகும். ஆனால் இந்த கடன்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அல்லது முதலாளிகளால் கொடுக்கப்படவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் பிரிவின் பாதிரியார்கள் மூலம் தேவாலயத்தின் ஆசீர்வாதங்களில் சேரும் பணத்தில் சிறிதும், தேவாலயத்தால் பெறப்பட்ட தானியங்கள் மற்றும் துணிகளும் இவ்வாறு கடனாக வழங்கப்பட்டன. 

08 July 2023

ஏன் நாடு வங்குரோத்தானது?

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு தகுதியற்ற அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டதால் இலங்கை பொருளாதாரப் படுகுழியில் விழுந்தது. ஆசியாவின் அனைத்து சமமான நாடுகளும் பொருளாதார ரீதியில்; சாதித்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. பொருளாதாரத்தை கையாளும் அதே அரசியல்வாதிகளை நாங்கள் மீண்டும் மீண்டும் நம்பியுள்ளோம். பல வருடங்களாக திரும்பத் திரும்ப கடைப்பிடித்து வரும் அந்த நடைமுறைக்கு முட்டாள்தனம், தந்திரம், சாணக்யம் போன்ற பல சொற்கள் எமது மொழியில் உள்ளன.

உங்களுக்குத் தெரியும் இரவு விழுந்த குழியில் பகலில்; விழக்கூடாது என்பது பழமொழி. இலங்கையர்கள் இரவில் விழுந்த குழியில் நடு பகலில் கண் திறந்து விழும் தேசமாக இருப்பதனைக் காண்கின்றோம். இல்லையேல் 75 வருடங்களாக ஒரே கூட்டத்தினரிடம் நாடு ஒப்படைக்கபட்டிருக்குமா?. இப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வுகள் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.