மக்கள் உணர்வை சீர்தூக்கும்
மன்றம் ஆழும் மன்னா வா
திசைகள் நாலாய் இருந்தாலும்
ஒருமை வேண்டும் மன்னா வா
மன்னா வா மன்னா வா
மன்றம் ஆழும் மன்னா வா
திசைகள் நாலாய் இருந்தாலும்
ஒருமை வேண்டும் மன்னா வா
மன்னா வா மன்னா வா
உங்களுக்குத் தெரியும் இரவு விழுந்த குழியில் பகலில்; விழக்கூடாது என்பது பழமொழி. இலங்கையர்கள் இரவில் விழுந்த குழியில் நடு பகலில் கண் திறந்து விழும் தேசமாக இருப்பதனைக் காண்கின்றோம். இல்லையேல் 75 வருடங்களாக ஒரே கூட்டத்தினரிடம் நாடு ஒப்படைக்கபட்டிருக்குமா?. இப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வுகள் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.