இடம்பெயுர்வுக்கு அப்பால் நாளாந்தம் புரிதாபகரமாக உயிர் இழக்கும் நிலமையை மோசமான வெள்ளம் ஏற்ப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு தொப்பிகல பகுதியை அண்மித்த ஈராளக்குளம் வேரம் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்துள்ளார்.வேலாயுதம் நந்தினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர். இச்சிறுமியின் சகோதரனான அனுஜன் மலசல கூடக் குழியொன்றில் விழுந்ததையடுத்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த வேளையில் இச்சிறுமி மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுமியின் தாய் வீட்டுப்பாவனைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சித்தாண்டிப் பிரதேசத்திற்கு வந்துள்ளார். இவர் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நேரத்தில் தொண்டுர்களின் உதவி இவ்வாறான நலிவுற்ற மக்களைக் காப்பாற்ற அவசியம் தேவை.
0 comments:
Post a Comment