ADS 468x60

12 January 2011

வெள்ளத்தை கடக்க முற்ப்பட்ட சிறுவன் மண்டடூரில் மரணம்.


கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களே அனேகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட லெட்சக்கணக்கான பொதுமக்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று காரைத்தீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சற்று முன்னுர்வரை 48 மணித்தியாலங்களாக கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் மரங்களிலும் மலைகளிலும் பாதுகாப்புடன் இருந்த 31 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.அடை மழையினால் மகா ஓயா ஆறு திடீரென பெருக்கெடுத்தமையால் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் டெம்பிட்டிய பிரதேச மலைகளிலும் மரங்களிலும் ஏறிக்கொண்டனர். எனினும் அடைமழையினால் வெள்ளம் தீவிரமடையவே மகா ஓயா பிரதேச செயலக அதிகாரிகள் பொலிஸார் ஆகியோர் இணைந்து விமானப் படையின் விசேட ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்டெடுத்தனர். இந்த இடத்தில் விமானப்படையினுரின் அர்ப்பணிப்பு பாராட்டுதற்குரியதே.
இன்னும் மண்டூர் தம்பலாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவனின் சடலம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் வௌ்ளத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரிதாபகரமான இளப்புகளைத் தவிர்க்க பாதுகாப்பான முறையில் இம்மக்கள் வெளியேற பொநறுப்புவாய்ந்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ தெரியவில்லை. மக்கள் அனைவரும் அணை திரண்டுவரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக வர தயவுசெய்து சதுர உதவியாவது செய்ய வாருங்கள்...

3 comments:

கவி அழகன் said...

கடவுளே அநியாயம் எப்பொழுது நிக்கும்

S.T.Seelan (S.Thanigaseelan) said...

அது அவனுக்குத்தான் தெரியும்...

S.T.Seelan (S.Thanigaseelan) said...
This comment has been removed by the author.

Post a Comment