ADS 468x60

24 April 2010

மீன் பாடும் தேன் நாடு

நீர் ஓடும் நாட்டில்
மீன் பாடக் கேட்டு
நெல் ஆடும் பூமியிது
சில்லென்று தென்றல் வீசி எமை
உல்லாசம் கொஞ்சிம் தங்க நிலம்
ஊரெல்லாம் பால் பொங்கும்
ஏரோடும் வளம் எங்கும்
;


கிழக்கில் கதிர்கள் மேலே கண்டு
உழைக்கும் மக்கள் ஆயிரம்
பசுமை கொஞசும் வயல்கள் கோடி
படுவான் கரையும் சொர்க்கமே
வீரம் மனதில் ஈரம்
கலைகளில் தேன் அமுது ஊறுமிடம்
தமிழில் இனிய சுவைகள் வந்து
அமிழ்தாய் காதில் பாயும் நாடு
இதுதான் இதுதான் இயற்கையின் வீடு



வளைந்து நெழிந்து ஓடும் வாவி
மட்டக்களப்பின் கோலங்கள்
நாட்டுக் கூத்து பாட்டுக் கேட்டு
நாகரீகம் வளர்ந்த நிலம்
விபுலா நந்தர் போலே
மண்டுர் புலவர்மணியும் வாழ்ந்த இடம்
வந்தோர் எல்லாம் வாழவைக்கும்
செந்தேன் சிந்தும் சொர்க்காபுரி
இதுதான் இதுதான் தமிழரின் நாடு.

0 comments:

Post a Comment