
பிடித்திருக்கு பிடித்திருக்கு
புரியவில்லை ஏனென்று...
காற்றை அழைந்து
கதைத்த நிமிடங்கள்
வலைத் தளத்தில்
வளைத்த வார்த்தைகள்
பக்கத்தில் வந்து
வெட்கித்த சாயல்கள்
பள்ளிப் பிள்ளைபோல்
பார்த்த பார்வைகள்
கல்யாணத்துக்கு நாள்
குறித்த நினைவுகள்
காது வலித்தும்-செல்லில்
கரைந்த காலங்கள்
எரிமலையாய் எழுந்த கோபம்
இதமாக விழுந்த பார்வை
பிடித்திருக்கு பிடித்திருக்கு
நீயும் நானும்
நிஜத்தில் வாழ....
0 comments:
Post a Comment