18 September 2024
தொழிற்கல்வியும் அனுரவும்
16 September 2024
அநுர குமார 2024 இலங்கைத் தேர்தலில் பல வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய காரணங்கள்
மாற்றத்திற்கு எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் பின்னர், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்தது. இதன் காரணமாக மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கினர். அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) புதிய மாற்றத்தை வாக்காளர்களுக்கு வழங்கும் முனைப்பில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பழைய அரசியல் அமைப்புகளிலிருந்து விலகி புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி இவர்களின் கொள்கைகள் அமைந்துள்ளன.
- பொருளாதார மாற்றம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டம்: திசாநாயக்க மக்கள் செல்வாக்கு மற்றும் ஆதாயங்களில் சமமான பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறார். அவர் வறுமையை குறைத்து, நீடித்த வளர்ச்சியைக் கொண்டுவரும் திட்டங்களை முன்வைக்கிறார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அனைவரும் சமமான அணுகல் பெறுவதே இவரின் நோக்கம்
13 September 2024
அனுரவும் ஐ எம் எவ்வும்
இலங்கை இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது யாரும் மறுக்க முடியாது. இதனைத் தீர்பதற்கு, அரசு ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, பாரிய பொருளாதார கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு மீதான அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் செலவு கள் என்பனவற்றினை குறைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகள் குறித்த காலத்தில் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியிருக்கலாம், ஆனால் இது பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை அதிகமாக பாதித்துள்ளது.
10 September 2024
அரச பல்கலைக்கழக முறைமையில் மாற்றம் தேவை
07 September 2024
ஏன் ஒரு புதியவரை ஆதரிக்கக்கூடாது?
இன்று மக்கள் அனைவரும் ஒரு நேர்மறையான மாற்றத்தினை எதிர்பார்கின்றனர். தேசிய மக்கள் சக்தியே இன்று மாற்றத்தின் ஒரே ஒரு முகவராக மாறியுள்ளனர். கசப்பான பாரம்பரியச் அரசியல் சாக்கடைக்குள் மக்கள் மீண்டும் அகப்பட விரும்பவில்லை.
தாங்க முடியாத நாட்டின் கடன் அதிகரிப்பு, மோசமான வரிச்சுமை, தவறான திட்டமிடப்பட்ட இறக்குமதித் தடைகள், மற்றும் நாட்டின் ரூபாயின் மதிப்பிறக்கம், பற்றாக்குறையான வெளிநாட்டுக் கையிருப்பு, அசமந்தமான வினைத்திறனற்ற ஆட்சி, தலைவிரித்தாடும் குடும்ப மற்றும் அரசியல் ஊழல். குண்மூடித்தனமான சுரண்டல் போன்ற கலாசாரத்தில் ஊறிய ஒரு பின்னணி உள்ள எவரையும் மக்கள் விரும்பவில்லை என்பதனை பலர் ஊடகங்களில் நேரடியாகச் சாடி வருகின்றனர்.
06 September 2024
அநுர மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கான செயல்திட்டம்
NPP இன் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில், அரசாங்கம் முழுமையாக வெளிப்படையான மற்றும் பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்ற பார்வை மிக முக்கியமானது. ஊழலற்ற ஆட்சி என்பது அநுர குமார திசாநாயக்க வாக்காளர்களுக்கு வழங்கும் முதன்மையான வாக்குறுதி.
05 September 2024
வெள்ளிச்சரத்தில் இது எனது 1000மாவது ஆக்கம்!
'கற்றவரிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவரிடம் கற்றுக்கொள்'- கார்ல்மாக்ஸ் சொன்னதுக்கு அமைய நான் கற்றுக்கொண்டு இருப்பதனையே உங்களுக்கு கற்றுத்தருவதற்காக இந்த தளம் எனக்கு அமைந்தவரம். ஆம், இது 'வெள்ளிச்சரத்தில்' https://vellisaram.blogspot.com/ எனது ஆயிரமாவது ஆக்கம். இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாசகர்களை அண்மித்துவிட்டது. இந்தப்பிரபஞ்சத்துக்கு இதற்காக முதல் நன்றிகள்!
இன்று நான் பெருமைகொள்கின்றேன். இந்தப் பிரபஞ்சம் விசித்திரமானது, பல அற்புதங்கள் நிறைந்தது. பல மனிதர்கள், பல முகங்கள், வௌ;வேறுபட்ட மனங்கள் அத்தனையும் படித்தற்குரியது. அதற்குள் எமது நாட்டில் குறுக்கு வழிகளன்றி சாதனைகள், அடைவுகள் மிகக் கடினமானது. ஆனாலும் நேர்வழியில் பயணம் செய்ய இத்தனை வருடங்கள் கடந்து இந்த ஆயிரமாவது மயிற்கல்லை எட்ட முடிந்தது. எனக்காக அல்ல இந்த சமுகத்துக்காக! எனக்கு ஆங்கிலத்திலும் ஒரு வுலக்ஸ் இருக்கின்றது யுனோவி https://unoov.blogspot.com/என்ற பெயரில். நான் எனது அப்பாவில் 41ம் நாளில் இதனை வெளியிடுவதில் பெருமைகொள்ளுகின்றேன்.