21 October 2017
20 October 2017
18 October 2017
தீபாவளியில் ஒரு பொய்யான கருத்தை நாம் வைத்திருக்கிறோம்.
இந்து மதத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களிடையே பண்பாடுகளை நெறிப்படுத்துகின்றன. நாம் வாழ்வாங்கு வாழ்வதனை வெளிப்படுத்துவதோடு ஓர் இனத்தின், மதத்தின், சமுகத்தின் கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கு செம்மைப்படுத்தி அதன் உட்கருத்துக்களும் பாரம்பரியங்களும் வரலாறுகளும் கடத்தப்பட வேண்டிய பொறுப்பு இப்பண்டிகைகளுக்கு உண்டு.
16 October 2017
சிருஷ்டிக்கும் பெண்!
அம்மாநீ காசிகள் சேர்க்க
கருவாடுகள் விற்கும் பணம்
தேசிய வருமானத்தில்
வருகிறதா தெரியாது!
நானும் உன்ட உழைப்பில்தான்
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...
10 October 2017
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் நியதி. இருப்பினும் பலருக்கு இதனை ஒத்துக்ெகாள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக கருகனை காட்டுவதிலும் பார்க்க கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் நிறைந்திருப்பாா்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.
நாம் பழையன என்ற வார்த்தையால் அதிக காலமாக பழக்கத்தில் இருந்தவை என்று பொருள் கொள்வோம். அப்படி நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து அவைகள், இதற்கு மேலும் உபயோகிக்கத்தக்கவை அல்ல என்று ஆனபின் அவைகளை நீக்குதலும், அதன் இடத்தில் புதிய உபகரணங்களைக் கொணர்வதும் அவசியமாகிறது.
09 October 2017
பணத்தினை தகுந்த முறையில் கையாழும் திறனுள்ளவா்களா பெண்கள்!!
பெண்கள் நிதியை மாத்திரமல்ல அவா்களது மதியால் உலகத்தை ஆழுபவா்களையும் அவா்களே ஆழுகின்றனா். அவா்கள் பல விடயங்களுக்கு எமக்கு எல்லாம் எடுத்துக் காட்டாக இருக்கின்றனா். இருப்பினும், மாற்றங்கள் தினம் நடந்துகொண்டிருப்பினும், மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை. பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை அவ்வப்போது கேட்க முடிகிறது. ‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும் பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல் மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன்.
08 October 2017
விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறிய ஒரு தொகை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழவு 09.10.2017 இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சி.சி.ரி.வி கமறா பொருத்துதல் சம்மந்தமான தொழில்நுட்ப பாடநெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
07 October 2017
மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில்
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் 07.10.2017 அன்று, மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.jpg)



