உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்.
உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.