ADS 468x60

06 February 2011

வெள்ளத்தில் அடையும் ஆடும், மாடும்...

'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை'
'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர், சிறப்பு'
போன்ற பொன் மொழிகள் ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கு பொருள் எவ்வாறு அவசியம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றதல்லவா. அவ்வாறான பொருள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள், வேளான்மைச் செய்கை, பசு வளர்த்தல், மீன் பிடித்தல், ஆடு, மாடு, கோழி போன்ற இன்னோரன்ன ஆதாரங்கள் மூலமே ஈட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                   (கோடைமேட்டில் உணவுக்காக வெள்ளத்தில் சண்டை போடும் மாடுகள்)
மனிதர்கள் தங்கள் உயிர்களைக்காப்பாற்றவே அவகாசம் இல்லாத அளவுக்கு வெள்ளம் மாசக்கணக்கில் பரவிச் செல்லும்வேளையில் எவ்வாறு ஏனையவற்றை பாதுகாத்துக் கொள்வது?. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரான திரு தொண்டமான் தெரிவித்த கருத்தில் பசுக்கள், கோழி, ஆடுகள் அடித்த வெள்ளத்தில் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி தங்க இடமின்றி வகை தொகையில்லாமல் வீதிகளில் பிணமாகக் கிடந்து நாற்றமெடுப்பதை பாதைகள் நெடுகிலும் காணக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

கால் நடை உத்தியோகஸ்த்தர்களின் கருத்துப்படி இந்த உயிர்கள் எல்லாம் குடிநீர், உணவு, மற்றும் தொடர்மழை காரணமாக நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன எனக் குறிப்பிட்டார். ஆவர்கள் மேலும் குருத்துத்தெரிவிக்கையில் இவ்வாறான நோய்த்தொற்றுக்களில் இருந்து எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற கால்நடை மருத்துவ முகாங்களை நடத்தவேண்டும் என்றும் அமைச்சர் குலாம் ஆலோசித்துள்ளதாம். இருப்பினும் இவ் மருத்துவ முகாங்களை மாகாண அமைச்சி மட்டத்தில் நடத்த வேண்டப்பட்டவேளை அவர்களிடம் தற்போது இதற்க்காக போதிய மருந்துகள் இல்லை என்றும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்க்கான நிதியும் கழடையாது என கையை விரிக்கின்றமை, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் அல்லவா உள்ளது.
                         (நெடுஞ்சேனையில் எங்களது உணவுக்காக பால் கரக்கும் ஒருவர்)
குறிப்பாக இலங்கையில் 48,000 பசுக்கள் இறந்துள்ளதென்றும் அதில் அநேகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அவை 6000 மேல் இறந்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் றொசான் நிர்மல் கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும் இவை இன்னும் அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் அநேகமாக தங்களது வாழ்கைக்கான ஆதாரத்தினை பசுக்களில் பெறும் பாலில் இருந்தும், அதனை தயிராக்குவதன்மூலமும் பெற்றுவந்தனர். இதன் காரரணமாக மட்டக்களப்பின் பால் பதனிடும் நிலையங்களும் அதிகரித்திருந்தன. 10 பால் பதனிடும் நிலையங்கள் பாதிப்படைந்துள்ள இந்நிலையில் அமைச்சின் ஊடகச் செயலாளர் கூறுகையில் புலிபாஞ்சகல்லில் ஒரு புதிய பால் பதனிடும் நிலையம் அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த இளப்புகள் குறித்த மதிப்பீடுகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், அவைகுறித்த இளப்புக்கான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

எது எப்படியுள்ளபோதும் நம்மக்களுக்கு பெய்த பேய் மழையாலும், அடித்த பெரு வெள்ளத்தினாலும் இருந்த பொருளும் இல்லை, வாழ அருளும் இல்லை.

0 comments:

Post a Comment