ADS 468x60

10 February 2011

ஆழ ஊடுருவும் அல்ககோல்....

ஒழுக்கமும் உணர்வும் அழியும் பொருட்டு; பரத்தையர்(வேசியர்) உறவுடன் ஒத்த தீங்கினை உடையது 'கள் உண்ணல்' எனும் மது அருந்தும் பழக்கம். இப்பழக்கம், சங்க காலத் தமிழரிடம் மிகவாகப் பரவியிருந்தது. சங்ககாலத்தை அடுத்து தமிழ் அரசரும், மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒருபெரும் காரணம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுகின்றனர். அவர், உடல் நலமும் கெடுகிறது. உள்ள நலமும் கெடுகிறது. அவர் வைத்திருக்கும் பொருள் நலமும் கெடுகிறது. இவ்வனைத்தும் கெடுவதனால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது. இதனை சமுக மேதையாகிய திருவள்ளுவர் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தினைக் கண்டித்துக் கூறியுள்ளார்.

'உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்
குள்காதல் கொண்டுஒழுகு வார்'
இரவு பகல் என்று பாராமல' எந்த நேரத்திலும் மது அருந்துவதையே காதலிப்பவன், விலங்கிற்கு நிகரானவன். புதவி, பணம் ஆகியன கள் குடிப்பவனிடம் இருந்தும் கூட மற்றவர்கள் அவனைப்பார்த்து உரிய மரியாதை கொடுக்க மாட்டார்கள். காலப்போக்கில் கள் குடியையே பழக்கமாகக் கொண்டிருப்பவன் தான் பெற்றிருந்த எல்லாச் சிறப்புகளையும் இழந்து விடுவான். என்று 'கள் உண்ணாமை' எனும் அதிகாரத்தில் இருந்து அழகாக புகட்டியிருக்கிறார்...

இனி இந்த மது மயக்கம் எதுவரைக்கும் என்கின்ற பொது விடயங்களை ஒரு தனிமனித வாழ்கையோடு ஒப்பிட்டு பார்க்கவேணும் என்ற ஆர்வம் மேலெழ இதை பிடியாக எழுத ஆரம்பித்தேன்..

இளமையில் தொடரும் மது பழக்கம் பற்றி....
இன்றய அநாகரிக உலகில் நாகரிகம் என்ற போர்வையில் செய்யக்கூடததை எல்லாம் செய்யத்தொடங்கி விட்டனர். இளம் பராயத்தினர் சும்மா என்று சொல்லி பாடசாலை மட்டங்களில் பழகுவது கல்லுரி பல்கலைக்கழகம் என்று தொடர்ந்து கடத்தப்படுகிறது இப்பழக்கம். இப்பழக்கம் இந்த வயதினரிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது, இவர்கள் தொடர்ச்சியாக குடிப்பதனால் பெரும் குடிமகனாக மாறி குடியழிந்தே போகின்றனர். இந்த பழக்கத்துக்கு பரிட்சயமான நண்பர்கள் வட்டம் இதனால் அதிகரித்த வண்ணமுள்ளன. இவ்வாறான குடி அடிமை, எதிர்ப்பால் கவர்ச்சியை சிறுவயதிலே தூண்டி அவர்களை சமுகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் அளவுக்கு மோசமாக்கி விடுகிறது.

ஏன் மதுவக்கு அடிமையாகிறான்...
கவிஞ்ஞர் கண்ணதாசன் கூறுவார் ' இந்த மது அருந்துவதில் உள்ள துயரம், நாம் எதை நினைக்கிறோமோ அதை வளர்த்து விடும்' என்று. இதை நாளடவில் அருந்த அருந்த அதன்பால் வயப்படுத்திவிடுகின்றதாம். இந்த குடிப்பழக்கம் அநேகமான கால அவகாசம் எடுப்பதில்லை, குடிப்பவர்கள் தங்களை எல்லோருக்கும் முன் குடிப்பதற்கு.. அதாகவே அவர்களை கொண்டு வந்து விடுகின்றது. இருப்பினும் குடி பேதைக்கு அடிமையானவன் தனது குடியை மறந்த பழய நிலைக்கு வருவதற்கு சாத்தியங்கள் இல்லையாம். இது அவனை ஒரு உதவியற்ற, கட்டுப்பாடிழந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.

விபத்தாக மாறும் சந்தர்ப்பங்கள்...
மது அருந்துதல் மத்திய நரம்பு மண்டலங்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றது. இதனால் எங்கள் சாதாரண செயற்ப்பாடுகளில் இயல்பு பலகீனப்படுவதுடன் கலங்களை களைப்படைய வைக்கிறது, அத்துடன் நாங்கள் பிரதிபல்க்க இருக்கும் விடயங்களை தாமதப்படுத்தி விடுகின்றது. இவை தான் விபத்துகள் நடைபெறுவதற்க்கான ஆபத்தினை விரைவுபடுத்தி விடுகின்றது. குறிப்பாக வாகனங்கள் ஓடும்போது, வீதியில் வீட்டுக்குள் கூட விபத்துகளை அது வரவளைத்து விடுகின்றது. இரத்தத்துடன் மது கலப்பதனால் 0.05 வீதமான நிதானத்தினை வாகனம் செலுத்துபவர்களிடையே அது இழக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகலாவிய ரீதியில் ஆட்டங்காணும் பலரது வாழ்கை குடித்து வாகனத்தை ஓட்டுவதனால்தான் என்று ஆய்வகள் கூறுகின்றது.

இதயத்தில் குடிகொள்ளும் மது..
குடிப்பழக்கம் இதயத்தின் பிடிப்புகளை சிதைவுபடுத்துவதுடன், இருதய இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. அதனால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கொண்டு வரகிறது. இதயத்தில் விரைவான மாற்றத்தினை ஏற்ப்படுத்துகின்றது. இதயத்தின் அனைத்துவிதமான நோய்களுக்கான ஆரம்ப படிக்கட்டாக இந்த குடிப்பழக்கம் காணப்படுகின்றது இதனை இன்னும் விரைவுபடுத்தும் காரணியான புகைத்தல் அமைந்த விடுகின்றது....

அதேபோன்று குடிப்பவர்களின் ஈரலில் பல நோயினை கொண்டு வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. குடிப்பதனால் ஒருவனது ஈரல் சிவந்து இரத்த கசிவை ஏற்ப்படுத்துவதுடன் இது பல வேறு நோய்கும் கால்கோலாகிறது.

'நல்லவங்க சாராயத்தை தொட்டதும் இல்லை- அதை
தொட்டவங்க லேசிலதான் விட்டதுமில்லை' “மது உள்ளே போனால் உண்மை வெளியே வரும்’’கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்ன வரிகள் ஏனோ சரிதான் என்று என் வாழ்வின் அனுபவத்தில் இருந்து சிலரைப் பார்த்திருக்கிறேன். ஆதனை விடததால் நீரழிவு நோயும் வருதாம். குடிப்பதனால் இரத்தத்தில் தங்கும் சீனியின் கலோரி அளவு அதிகரிக்கின்றது. இதனால் இலகுவில் நீரழிவு நோய் தொடர்கிறது.அது மாத்திரமில்லை எலும்புகளை உருக்கி அதனை சிறிதாக்கி அதை வலுவிழக்கச் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் எலும்புகளில் காணப்படும் கல்சியத்தினை உறிஞ்சி இல்லாமல் செய்து விடுகின்றது. 

இன்னும் ஒரு விடயம் குடிப்பவர்கள் பாலியல், உடலியல் இன்பத்தில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டே போவார்களாம் இதனால் ஏற்ப்படக்கூடாத இழப்புகள் எல்லாம் குடும்பத்துக்குள் ஏற்ப்படுகின்றது. மாயோ கிளினிக் தகவல்படி இந்த குடிப்பழக்கத்தினால் வாய், தொண்டை, மார்புகளில், இதயத்தில் எல்லாம் புற்றுநோய் ஏற்ப்படும் வாய்ப்புள்ளதெனவும் எச்சரித்துள்ளனர்.

ஆண்கள் மட்டும் குடிப்பதில்லை பெண்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர், ஆண்களும் பெண்களும் சமம் என்பதனால் என்னவோ குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர். கற்ப்ப காலங்களில் பெண்கள் குடிப்பது பாரிய ஆபத்தினை ஏறப்படுத்தி விடுகின்றது. இவர்கள் இக்காலப்பகுதியில் குடிப்பதனால் அங்கவீனமான, மன, உடல் வலிமை குன்றிய, உள் ஆற்றல் குறைந்த ஒரு சமுகத்தை ஆக்கிவிடுகின்றனர்..

தவிரவும் மது அருந்துவது அவனின் மூழைப்பகுதியை அதிகமாகப் பாதித்து விடுகின்றது என்று கூறுகின்றனர். இது ஒருவனை மன நோயாளியாக்குவதுடன், உழவியல் அழுத்தங்கள், தாக்கங்களுக்கும் இட்டுச் செல்கின்றது. இது அவனை வேலையற்றவனாக்கி, குடும்பத்தில் இருந்து பிரிய வைத்து, தீய நண்பர்களின் சகவாசத்தை தூண்டி விட்டு சுகமாக வாழவேண்டியவனை சுடுகாட்டுக்கே கொண்டு சென்று விடுகின்றது.

வளியென்ன குடி நீங்கவே...
ஆகவே இத்தனை மோசமான விளைவுகளைத் தரவல்ல முத தேவைதானா என்று கேட்கும் அவர்களிடம், சரி பழகித்தன் தெரியல என்ன வழி இதனை விடுவதற்கு என்று நீங்கள் கேட்கலாம் சரி...நிறையவே இருக்கு, நல்ல வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேட்க்கலாம், பொது தொண்டுகளில் ஈடுபடலாம், அவ்வாற குடிப்பதை மெது மெதுவாக குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பம், வருமானம், எதிர்காலம் என்பனவற்றை நினைத்துப்பாருங்கள் இது தேவைதானா என்பது புலனாகும், அதவும் சரிவர இல்லை எனில், வள்ளுவர் சொல்வதை கேளுங்கள்....
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?

அதாவது எப்பிளை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடித்து வருவது வரும் மகனை ஏற்க்க தகாதாம். ஏனெனில் பாவணர் கூறுகிறார் இதனை விரித்து, மெய் முதலான ஐம்புல உணர்வை இழத்தல், உளரல், பைத்தியம் போல் பிதற்றல், ஆடை அவிழ்தல் கூட தெரியாதிருத்தல், தீய வாடை வீசுதல், வாய் நுரை தள்ளுதல், வழியில் மண் மேல் கிடத்தல், வழிப்போக்கர் பழித்தல், ஈ மொய்த்தல், சின்னஞ் சிறுமியர் கேலி செய்து சிரித்தல் நேரும்... இந்த குடிகாரர்களுக்கு என்று உன்மையை அப்பட்டமாய் கூறி எங்களை திருந்தச் சொல்லுரார் புரிந்தால் சரி....

இதில் மேலதிக விடயம் உங்களுக்காக  http://www.natpu.in/Pakudhikal/Nam%20Samookam/alcohol.php


-----இது எனது நண்புர் ஒருவுரின் வேண்டுகேளுக்காக எழுதப்பட்டது...

2 comments:

மதுரை சரவணன் said...

good post. vaalththukkal

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே

Post a Comment