ADS 468x60

08 February 2011

பெண்ணுக்கு இரண்டு மனமா???????

சின்ன கதை ஆனால் பெரிய உண்மை..பொறுமையாய் வாசித்தால் புரியும். 
அரசனை ஆண்டியாக்கினாய், புரிசனை போகியாக்கினாய், பாவியாக்கினாய். அணுகுண்டு தயாரிக்கும் வல்லரசு நாடுகள் இன்னும் புத்தி கெட்டுக் கிடக்கின்றது போலும், ஏனென்றால் அணுவை விட மோசமான சக்தி பெண்களிடம் இருக்கிறது. ஆமாம் புரியாமல் இருக்கும் நகைப்பாய் இருக்கும் புரிய வைக்கிறேன்.

ஒரு துறவி உட்ஜயனி நகரத்தினிடையே ஆச்சிரமம் நோக்கி நடந்துகொண்டிருந்தார். அப்போது மக்கள் அனைவரும் விலகி இடம் விட்டனர், ஒதுங்கி கைகூப்பி நின்றனர், சிறிது நேரத்தில் விலகுங்கள் விலகுங்கள் மகாராஜா வருகிறார் என்றனர், துறவி விலகவில்லை.. மன்னனின் காவலர்கள் விலகச் சொல்லியும் விலகவில்லை கண்டு கொண்டார் மகாராஜா...

அவரைப்பார்த்து மன்னன் கேட்டான்: 'யார் நீ?'
துறவி சொன்னார் 'மனித உயிர்கள் தங்களை தாங்களே கேட்டுக் கொள்கிற கேள்வி!'
எங்கிருந்து வருகிறாய்?
'கருப்பையில் இருந்து'

எங்கே போகிறாய்?
'இடுகாட்டுக்கு'

இங்கென்ன வேலை?
'இடையில் ஒரு நாடகம்'

தங்குவது எங்கே?
'வானத்தின் கீழே'
திமிரா உனக்கு என்று காவலர்கள் நெருங்க 'அவனை விட்டுவிடுங்கள்' என்று மன்னன் சென்றான்....

ஆச்சிரமம் சென்றடைந்தார் துறவி...இரவானதும் ஏடு பாடிக்கொண்டிருந்தார் துறவி..
ஆனால் இன்னொரு துறவியோ பெண்களைப்பற்றி பெருமையாய் பாடத் தொடங்கினார்...
'மூடிய ஆடை முற்றத் களைந்து முகம் தழுவி
சூடிய கொங்கை சுற்றிப் பிடித்து சுடர் பரப்பி
வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடி விட்டு
நாடிய இன்பம் மாந்தருக் குண்டு நமக்கில்லையே'

துறவி கோபத்தில் பார்த்தார் இன்னும் ஒரு பாட்டை மற்ற துறவி பாடினார்...

'செப்பளவு கொங்கை சேயிழை யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டு
கொப்புளந் தொட்டு குளத்தினில் மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!'

இவர் யாருமில்லை இந்நாட்டு மகாராஜாதான் மாறுவேடத்தில் வந்திருந்தார்...
அதற்கு துறவி பாடினார்...
'சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே- நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்'

 என்று பதிலிறுக்க கோபம் கொண்ட மன்னன் பெண்களைப் பற்றி அசிங்கமாய் பேசும் நீ என் பட்டத்து ராணியையும் அப்படியா கூறுகிறாய் என்று கேட்க....
துறவி கூறினார் 'எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு!' என்றார்.
மன்னர் குலத்தை இகழ்ந்தமைக்கு மன்னிப்பு கேள் என்றார்....முடியாது என்ற துறவியை சிறைப்படுத்தினான் மன்னன்...

அரன் மனையில் மன்னன் சென்று மேல் மாடத்தில் உலாத்தும் போது..அவனது மனம்.....
எனது பட்டத்து ராணி ஒரு தெய்வத்திருமகள், 
அவளுக்கு ஒரே மனம்....அது முற்றிலும் என்மீதே!
இரவுக்கு ஒரே நிலவு; பகலுக்கு ஒரே ஆதவன்.
எனக்கு அவள்; அவளுக்கு நான்......
அப்பொழுது 'பிரபு' என்றாள் ராணி
'தேவி' என்றான் மன்னன்

அவள் அவனை முத்தமிட்டாள். தௌளிய தடாகத்தில் சுவாமிகள் கிளப்பி விட்டிருந்த அலை ஓய்ந்து விட்டது. 'என் தெய்வமே' என்றாள்...மதுவினை ஊற்றிக் கொடுத்தாள்..அதிகம் பருகினான் மன்னன்..உள்ளத்து ரகசியம் வெளிவரத்தொடங்கியது...

'உனக்கு இரண்டு மனம் என்று ஆண்டி சொன்னான்' என்றதும் ராணி அழுதாள்
'உங்களைத்தவிர ஒருவரை நான் மனத்தாலும் நினைத்திருந்தால் அந்த நெருப்பு என்னைத் தீண்டட்டும்' என்றாள்

கோபம் கொண்ட மன்னவன் மறுநாள் இரவு துறவியை சிறையில் சந்தித்து.... ராணிக்கு இரண்டு மனம் என்றதுக்கு ஏய் ஆண்டி ராணியிடம் மன்னிப்புக்கேள் என்றான்...அதற்து மறுப்பு தெரிவிக்க நாளை சாவதற்து தயாராய் இரு என்று மன்னன் கூற...அதற்கு நான் தயார் நீ போய் நிம்மதியாய் தூங்கு என்றார் துறவி......
மன்னவன் அரன்மனைக்கு திரும்பினான், மாடத்தில் உலாத்தினான், காலையில் துறவியை களுவேற்ற உள்ள செய்தியை ராணிக்கு சொல்ல விரும்பினான்.

பள்ளியறையில் தேடினான்; அவளில்லை
அந்தப்புரத்தில் தேடினான்; அவளில்லை
அந்த நள் இரவில் ஏதோ ஒரு சக்தி அவனை குதிரை லாயத்தின் பக்கம் இழுத்ததுச் சென்றது. அங்கே அவன் கண்ட காட்சி....

அதை விவரிக்க முடியவில்லை....
அஸ்வபாலன் என்ற குதிரைக்காரன் மடியில் அவனது பட்டத்து ராணி படுத்திருந்தாள்....குதிரைக்காரணிடம் ராணி கூறிக்கொண்டிருந்தாள்' நீண்ட நாட்கள் வாளக்கூடிய ஒரு கனியை, ஒரு முனிவர் என் கணவருக்குக் கொடுத்தார். என் கணவர் அதை என்னிடம் கொடுத்தார்; நான் உங்களிடம் கொடுத்தேன், நீங்கள் சாப்பிட்டீர்களா?' என்று

அதற்கு அவன் சொன்னான்' இல்லை; அதை என் ஆசை நாயகி காமினியிடம் கொடுத்தேன்' என்றான்.

அப்போதுதான் மன்னவனுக்கு புரிந்தது 'பெண்களுக்கு இரண்டு மனம் என்று' சுவாமி சொன்னது சரியென்று.........

தீண்டக் கூடாததை தீண்டிவிட்டால், கையைக் களுவி துடைத்து விட வேண்டுமே தவிர, அடிக்கடி வாசனை பார்க்கக் கூடாது....
இதைத்தான் மன்னவனும் செய்தான் ராணியை நிர்வானமாக குதிரையில் ஏற்றி மக்களால் கல் எறிந்து கொலல வைத்தான் மன்னவன்..

கோபிகள், பாவிகள், இழிமகள் இவர்களின் தொடர்பிலேதான் ஞானம் பிறக்கிறது என்று கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார்... அப்படித்தான் இந்த உட்ஜயனி மன்னனுக்கும் ஞானம் பிறந்தது.....பெண்களை மட்டுமல்ல அவனது நாட்டையே துறந்து துறவியுடன் துறவு பூண்டது பெண்ணால் தானே?

மன்னவன் துறந்த பின்னர் பாடிய சில பாடல்கள் இங்கே;
'கால் காட்டி கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கயரை மறந்திருப்ப தெக்காலம்'

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தை வைப்பதெக்காலம்'

எனக்கும் பிடித்த இந்த கதையை உங்களிடம் சொல்லாமல் இருக்க என் பேனா விடவில்லை அதனால் எழுதினேன்... இதில் வரும் துறவி வேறு யாரும் இல்லை நம்ம பட்டினத்தார் தான்....

0 comments:

Post a Comment