மட்டக்களப்பின் பல பகுதிகள் இன்னும் நலிவுற்ற தன்மையில் இருக்கின்றன என்பதற்கு இன்னும் எமது மக்கள் வறுமையிலும் தொழில் இன்றியும் இருக்கின்ற தரவுகள் சாட்சியாக இருக்கின்றன. இவற்றுக்கான நிவாரணங்கள் மாத்திரம் போதாது, அவர்களை இந்த நிலையில் இருந்து எடுத்தேத்தவும் தேவை இருக்கின்றது. அந்த வகையில் மக்களுடன் இணைந்து கண்ணபுரம் நாராயணன் பாலர் பாசாலை, கிழக்கின் ஒளி பாலர்பாடசாலை மாலையர்கட்டு மற்றும் பாமுருகன் பாலர்பாடசாலை திக்கோடை ஆகிய பாடசாலை குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஒரு தொகை நெஸ்ட்டமோல்ட் பால்மாவினை நிக் அன்ட் நெல்லியின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் வசிக்கும் பிரியன் மற்றும் நிலானி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்
.
இந்நிகழ்வு கிழக்கிலங்கை இந்துசமய சமுக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் வெல்லாவெளியில் 20.04.2019 அன்று இதன் தலைவரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் இந்த பாலர்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment