ADS 468x60

20 August 2023

பா.ம உறுப்பினர்களுக்கு இப்போது சொகுசுக்கார்கள் தேவைப்படுகின்றதாம்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தமக்கு வரியில்லா கார்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்கு ஆற்றி வரும் சேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கார்களை அல்ல ஹெலிகாப்டர்களை வழங்குவது சாலப்பொருந்தும். ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் ஹெலிகாப்டர்களைக் கேட்கவில்லை. அவர்கள் சொல்வது போல், பொருளாதார நெருக்கடியால் நாடு ஏழ்மையில் இருக்கும் நேரத்தில், எம்.பி.க்கள் கார் கேட்கின்றனர். மறுபுறம் வறட்சியின் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் வயல் நிலங்கள் கருகி வைக்கோலாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எம்.பி.க்கள் எந்தவித சிரமமும் இன்றி டியூட்டி ஃப்ரீ கார்களை கோருகின்றனர்.

நீங்கள் கோரிக்கை விடுங்கள், பரிசீலிக்கலாம்' என்று ஜனாதிபதி சொன்னாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் இன்று உலகில் விலை உயர்ந்த சொகுசு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசியாவிலேயே இரண்டாவது வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இந்திய அமைச்சர்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'அம்பாசிடர்' கார்களையே இன்றும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இலங்கை அமைச்சர்களின் மகன்கள், பேரன்கள் கூட டிஸ்கவரி, பிராடோ, ஹேமர், பிரியஸ், ஆடி போன்ற உயர் மொடல் கார் இல்லாமல் போக முடியாது.

அதுசரி அவர்களின் கலாச்சாரம் ஒன்று. நமது கலாச்சாரம் வேறொன்று.

நாட்டின் வங்குரோத்து நிலை மற்றும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறை காரணமாக கார்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இது ஒரு முக்கியமான புத்திசாலித்தனமான நடவடிக்கை. இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வரியில்லா வாகனங்களை கொண்டு வருவதற்கு இதுவே சரியான தருணம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றனர் போல. இலங்கையில் இந்த வாகனங்களை இழந்ததால், பொடிநடையாகவோ, பேருந்திலோ செல்லும் எம்.பி.க்கள் யாரும் இல்லை.

அப்போது, முன்னாள் பிரதமராக இருந்த காலி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயானந்த தஹநாயக்க, காலியிலிருந்து பேருந்தில் வந்து கோல்ஃப் மைதான சுற்றுவட்டத்தில் இருந்து இறங்கி பழைய பாராளுமன்றத்திற்கு சென்ற விதத்தை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இன்னும் இரண்டு மூன்று கார்கள் வீட்டில் வைத்திருப்பவர்கள்தான் சுங்கவரியில்லா வாகனங்களைக் கேட்பவர்கள் என்பது கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தெரியும்.

ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது. நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து வாங்க பணம் இல்லை. இந்தியாவில் பிச்சைக்காரர்களிடம் கையூட்டு கேட்ட நாடு, தொழிலாளர் நல நிதியத்தினைக் தட்டிக்கழிக்கும் நாடு, ஏழைகளின் சீனி, மாவு, பருப்புக்கு என்பனவற்றுக்கு 30 வீதம் முதல் 40 வீதம் வரை வரி விதித்த நாடு என்று என் பாட்டி காலத்தில் கூட சொல்லக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இவ்வாறான நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகனங்களை வாங்குகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சூப்பர் காரில் கிராமத்திற்கு வருவதையே வாக்காளர்கள் விரும்புவதாக, மூளை உடலில் தவறான இடத்தில் இருக்கும் சிலர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப அனைத்தும் மாற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இலங்கையில் வரி செலுத்தும் தொழிலதிபர்கள் 19,000 பேர் மட்டுமே இருப்பதால், எனவே இவர்களின் வரிப்பணத்தில் வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்று முறையிட நாட்டு மக்களுக்கு உரிமை இல்லை என்பதே அவர்களின் வாதம். இலங்கையின் வருமான வரித் திணைக்களம் 85 வீதம்ட மறைமுக வரிகளை வசூலிப்பதாகவும், அதில் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் அவர்கள் வேண்டுமென்றே மறைக்கின்றனர். அரசு 15 வீதம் நேரடி வரி மட்டுமே விதிக்கிறது. இந்த நேரத்தில், ஏழைகளிடம் பறிக்கும் பணத்தை, எம்.பி.,க்களுக்கு கார் கொண்டு வர செலவு செய்வது, எந்தவகையில் நியாயம்?.

உடனே விளங்கமுடியாத உண்மைக் கதை மற்றொன்று உண்டு. இன்னும் ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி தேர்தல் வந்தாலும், பொதுத் தேர்தல் வந்தாலும், எம்.பி.க்கள் கிராமத்திற்கு தங்கள் ஆதரவாளர்களை அனுப்ப லஞ்சம் கொடுக்க வேண்டும். அந்த லஞ்சங்கள் மக்களின் வரிப்பணத்தில் கொண்டு வரப்பட்ட வரியில்லா கார்களாக இருக்கலாம். 

கடந்த நான்காண்டுகளில், ஆட்சியில் உள்ள எந்த ஒரு அமைச்சராவது, மக்களுக்கு பொருளாதார பலத்தை அளிக்கும் வகையில், கிராமத்துக்கு ஏதாவது திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்களா என்பதை, திரும்பிப் பார்க்குமாறு, மக்களை கேட்டுக்கொள்கிறோம். நாடு பெற்ற கடன் பணத்தை சுரண்டுவதைத் தவிர, இதுவரை அவர்கள் எதுவும் செய்திருக்கின்றார்களா?. எம்.பி.க்களை சொகுசு கார்களுடன் கிராமத்திற்கு அனுப்புவதன் மூலம், அப்பாவி கிராம மக்கள் எதையும் பெற்றுவிட முடியாது.


0 comments:

Post a Comment