மீன்மகள் பாட ஆடும் தென்னை
மேவியே தென்றல் வந்து பாடும்
தேனகர் வந்துறை சிவசிவனே
மாமாங்கம் அருள்தரு ஈஸ்வனே
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
ஆடியில் தேரினில் நீவருவாய்
ஆறிட என்வினை நீயருள்வாயே
சேற்றினில் ஆடிடும் தீர்த்தமது
போக்கிடும் பாவங்கள் நீர்த்துளியாக
மட்டு மண்வாழும் ஈஸவரனே
மக்கள் மனம்நிறைந்த பேரருளே
பிட்டு உணவாக நீவேண்டி
சுட்ட மண்சுமந்த சுந்தரனே
தாயக மண்ணின் தனித்தமிழ் முதல்வா
தூயனே உனைத்தொழ தொல்லைகள் அகலும்
தாயென உனைநாம் தாழினைத் தொழுதோம்
சேயென எம்குறை தீர்த்திட உடன்வா
ராமன் வணங்கிய தற்பரனே
யாவும் அறிந்திடும் சிவனுருவே
பாவம் குறைந்திட பார்வையினால்
பார்த்து உன்னருள் தந்திடுவா
தேனகரில் சிவனுருவே
தேடிவருவோரின்; நெஞ்சிருப்பாய்


0 comments:
Post a Comment