ADS 468x60

22 September 2011

முரண்......


நியாயம் அநியாயம் எல்லாம் இப்போ கதைக்கப்படுவது குறைந்துவிட்டது. கலியுகத்தில் நடப்பதெல்லாம் அநியாயம்தான், அல்லாது நன்மை செய்பவன் நாதியற்றுதான் கிடக்கிறான். இருப்பினும் எச்சசொச்சமாக நன்மை செய்பவர்களும் உளர். 

உள்ளம் என்பது ஆமை அதில் 
உன்மை என்பது ஊமை 
சொல்லில் வருவது பாதி 
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி.

ஆதலால் உள்ளம் ஆமைபோல் எல்லாவற்றயும் உள்ளே இளுத்து அடக்கி வைத்திருக்கிறது கண்டு கொள்வது சிரமம். நெஞ்சில் என்ன இருக்கிறது என்பதனை வாய் வார்த்தைகளை கொண்டு அறிய முடியவில்லை, நாடகமேடையில் நடிக்க வந்தவர்கள்போல் யதார்த்தத்துக்கு மாறாக நடிக்கிறவர்கள் அநேகம் அநேகம்.

03 September 2011

அதிர வைக்கும் ஆதித்யா குட்டி.

உலகத்தில் மிக விரும்பப்படுவது சிறுவர்கள் அவர்களுடைய ஆக்கங்கள், செயற்ப்பாடுகள் அதுபோல் எல்லாமே. என் வாழ் நாளில் ஏன் எல்லோரது வாழ்விலும் இந்த அளவுக்கு கவர்ந்த திறமையான அழகான செல்லக் குழந்தை ஆதித்யா என்று சொன்னால் அது ஒன்றும் மிகையல்ல. ஆதித்யா குட்டி உங்களுக்கு எனது தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் இருக்க வேண்டுகிறேன். 

சக்தி தயாரிக்கும் நிகழ்சிகள் அனைத்தும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை;   இருந்தும் சக்தியின் யூனியுர் சுப்புர்ஸ்ரார் நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த தெய்வக் குழந்தை ஆகித்யா தான்.

என்ன அசத்தலான குரல், என்ன அடக்கம், என்ன மரியாதை, ஞானம் இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய வளத்தை இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கிறான் வார்த்தைகளில் சொல்ல முடியாத திறமைசாலி. எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய ஆசை ஆதித்யாவை சந்தித்து நேரில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசிப்பதுதான்

25 August 2011

'மேலைத்தேச நாடுகளில் அனர்த்தம்' மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-


யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.

நுண் நிதி நிறுவனத்தின் குறிக்கோள்கள் எவ்வவாறு நலிவுற்றோரை பலப்படுத்துகிறது.

இலக்குச் சந்தையை தெரிவு செய்வது, நுண் நிதிச் சேவையை வழங்குனர் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அறியப்பட்ட கேள்வி ஆகியவற்றில் தங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிலும், சேவை வழங்கப்படாத அல்லது குறைவாக சேவை வழங்கப்படுகின்ற தொழில்களும் குடும்பங்களும் உள்ளன. இவர்கள் பொருளாதார ரீதியில் செயலூக்கமற்ற மிக வறியவர்களிலிருந்து தமது சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வளர்ந்திருக்கின்ற சிறிய தொழில் முயற்சிகள் வரை பரந்து காணப்படுகின்றன. 

24 August 2011

கிறிஸ் மனிதன் ஒரு கேள்விக்குறியா?????

இன்று கிறிஸ் மனிதன் தொல்லை கடந்து வந்த பயங்கரவாத சூழலைவிடவும் மிகமோசமானதாக இருப்பதனை நடந்தேறுகின்ற நிகழ்வுகளை வைத்து சொல்லக்கூடியதாய் இருக்கின்றது. நெடுநாளாய் எழுதுவதற்கு உந்தியபோதும் கிடைப்பற்கரிய நேரம் போதாமையால் எழுதமுடியாமல் போய் விட்டது. இருப்பினும் இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கை எவ்வாறான பாதிப்புகளை, அடக்குமுறைகளை கொண்டுவந்துள்ளது என்பதனை பார்க்கவேண்டியுள்ளது.

10 August 2011

காதலே வெறும் மாயடா!!!!












காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா............

கேவலம் பெண்ணுக்கு அடிமயா!
அவலமே உனக்கென்ன முடுமயா!
சொந்தங்கள் உன்க்கொரு தோழடா- நீ
பேர் சொல்லப்பிறந்த ஆளடா.!.

செல்லம் செல்லம்எண்டு சாகிறாய்!
சீர்கெட்ட பெண்ணுக்கு மோகிறாய்!
உள்ளம் வைத்தவளை தேடடா- நீ
ஒன்றுமறியாத மாடடா! இல்லை

காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா.............

26 July 2011

நானும் மனிதனாய்...

Myspace Roses Graphics Flowers Clipart 
என் காமத்தின்
இடைவெளிகளை
காதலின் 
படுதோல்விகளை
நீ நெருங்கிப் பழகிய.....
அர்த்தநாரீசம்,
இவையெல்லாம்
இன்னும் 
நானும் நீயுமாய்
இருப்பது போன்று
தோத்தரவாக்குகின்றது.


காலத்தின்
காவல் அறைக்குள்-நான்
வாழவும் சாகவும் -முடியாமல்
வானத்தின் கோலங்களாய்-என் 
வசந்தங்கள் தொலைந்தும்
நீயும் நானும் இருந்த
நினைவுகளின் ..
மாத்திரைகளுடன்
இன்றோ நாளையோ
என்றோ என்று
நானும் மனிதனாய்....

19 July 2011

றோல் மடல்....

Myspace Puppies Graphics Dogs Clipart
றோல் மடல் என்பது ஒரு விதமான மனவியல் அணுகுமுறை என்று கூறலாம். வாழ்க்கையில் சில பாத்திரங்கள் எங்களை வெகுவாகக் கவர்ந்து கொள்ளும், சில வெறுப்பை ஊட்டும். இன்று சினிமா, விளையாட்டு, மொடலிங், தொடர் நாடகங்கள் இவை எல்லாம் இளம் தலைமுறையினரை பலப்படுத்தியுள்ளதா, பலவீனப்படுத்தி உள்ளதா? ஏன்றால் பலவீனப் படுத்தியுள்ளது என்றே விடை வரும்.

குறிப்பாக இளம் பெண்களிடையே தங்களுடைய வாழ்கை துணைவர் எப்படி இருக்க வேணும் என்ற கேள்விக்கு வந்த பதில்களில் அயன் சூரியா, சியான் விக்ரம், கில்லி விஜய் போன்று கொஞ்சம் பசன், கொஞ்சம் வில்லத்தனம், முழு அக்டிவான ஆளா இருக்கும் ஆண்களைத்தான் பிடிக்குமாம்..