ADS 468x60

17 July 2017

யாருக்கு தெரியும் இன்னும் தமிழர்கள் இருட்டுக்குள் கிடப்பது

கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர்,  இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.

எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த  கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.

உன்னை வரவேற்று வாழ்த்துகிறேன்..

ஓ போகிறாயா ஆண்டே!
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே, 
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம் 
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.

16 July 2017

மீன் பாடும் நாட்டில் கொட்டிக்கிடக்கும் அழகு!

உலகம் இன்று விரல் நுனியில் தவழும் அளவுக்கு சுருங்கி விட்டது. மெல்ல நகர்து கொண்டிருக்கும் இந்த உலகத்தினுள் சமிப காலத்தில் பாரிய பொருளாதார, வள வேறுபாடுகள் வேரூன்றி விட்டது. இது 'உலகை ஏழைவர்க்கம் மற்றும் பணக்காற வர்க்கம் என  இரண்டாப் பிரிக்கும் அளவுக்கு விஸ்வரூம் எடுத்திருக்கிறது' என, 1986 இல் ரண்ணன் வெற்ஸ் என்பவர்  குறிப்பிட்டிருந்தார். உலகில் ¾ பங்கினர் 16 சதவீதமான வருமானத்தினை மட்டும் அனுபவிக்க மற்றய 84 வீதமான உலக வருமானத்தினையும் உலகின் 20 வீதமான மக்கள் மட்டும் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வான உலகில் எங்கள் வாழ்க்கை நகர்கின்றது.

 ஐக்கிய நாடுகள் சபையின் இப்போதய அறிக்கையின்படி, உலக சனத்தொகை 7 வீதத்தில் இருந்து இது 2050 இல் 9.1 பில்லியனாக உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதிசயமும் ஆபத்தான விடயமும் என்னவெனில் இதில் 90 வீதமான மக்கள் தொகை ஆசியா போன்ற வளர்முக நாடுகளிலேயே காணப்படும் எனக்கூறப் பட்டுள்ளது, அப்படியானால் இவர்களுடைய எதிர்கால வாழ்கை, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் வளப்பகிர்வுகள் எவ்வாறு இருக்கும் என சிந்தித்துகூட பார்க்க முடியாமல் இருக்கின்றது.

15 July 2017

மீனவர் சங்கங்கள் வலுப்பெறவேண்டும்.

நமது கிராம மக்களை முன்னேற்றுவது எமது மாவட்ட ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்கும் என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.

14 July 2017

தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும்.


நாங்கள் இன்னும், எங்கள் சமுகம் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கின்ற தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும். அவர்களை தொழில் துறைக்குள் கவர்ந்திழுக்கும் மார்க்கத்தினை கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை விாிவாக்கம் செய்ய வேண்டும். 

இன்று எமது நாட்டில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கின்ற, அதிக வருமானத்தினை ஈட்டித்தரும் துறைகளாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு (பணிப்பெண்கள்), தேயிலை தொழில் சாலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறைகள் காணப்படுகின்றன. இவற்றில் வேலைசெய்வோர் அதிகம் திறனற்ற தொழிலாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் ஆகக்குறைவாக அதே நேரம் தொடர்பான திறனுடன் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித்தருகின்றமை குறிப்பிடதடதக்கது. 

06 July 2017

ஒரு நாட்டின் திறனுள்ள இளைஞர்களே அதன் வளர்ச்சியின் முதுகொலும்பு

அறிமுகம்.
இலங்கை சமுகரீதியான நல்ல கொள்கைகளை அழுல்படுத்தும் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஒரு மாதிரி நாடாகும். இருப்பினும் தசாப்த காலமாக இளைஞர்களிடையே வேலைவாய்பை உருவாக்குவதிலும் அவர்களது ஏனைய தேவைகளை நிறைவுசெய்வதிலும் பாரிய சவால்களை அரசு எதிர்நோக்கி வருகின்றது. எவ்வாறாயினும், இளைஞர்களே ஒரு நாட்டின் எதிர்காலத்தின் பிரதிநிகள். அவர்கள் அந்த நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்கினை வகிப்பது அவர்களது கடமை. ஒரு நாட்டினுடைய உற்பத்தி அந்த அரசாங்கத்தின் உதவியைவிட அந்த நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் பங்களிப்பில் இருந்து வருகின்ற ஒன்றாகும். ஆக ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி இளைஞர்களின் தோழ்களிலேயே தங்கி இருக்கிறது. 

05 July 2017

ஏமாற்றப்படும் மட்டக்களப்பு வாழ் மக்கள்.

நாம் எப்படியெல்லாம் ஏமாறுகின்றோம் என்பது தெரியுமா? கட்டாயமாக வரும் ஏமாற்றம், அறியாமையினால் வரும் ஏமாற்றம், கவனக் குறைவினால் வரும் ஏமாற்றம், பேராசையினால வரும் ஏமாற்றம். இதில் முதல் மூன்று வகையிலும் தோ்தல் காலங்களில் எமது மக்கள் செமயா ஏமாந்து விடுகின்றார்கள் என்பதற்கு அப்பால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுதான் உன்மை.

01 July 2017

அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...

பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.