ADS 468x60

14 January 2024

தட்டிக்கேள்


 

சாபம் வேணாம் பாவமும் வேணாம்! அர்தமற்ற பாராளுமன்ற பதவியை துறக்கும் நிலை!

என்ன கொடுமை இந்த நாட்டின் மக்கள் என் குழந்தைகளையும் மோசமாகச் சபிக்கிறார்கள் என சமகி ஜனபலவெக்கின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சமிந்த விஜேசிறி கூறிக்கொண்டு தான் இராஜினாமா செய்வதாக தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தது நாம் அனைவரும் அறிந்ததே!. தனது மனசாட்சிக்கு இணங்க இப்படி ஒரு முடிவை எடுத்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்தான்.

இந்த நா.ம.உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இருவர் பாலர் வயதுடையவர்கள். எம்.பி., இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு வழமையாக அழைத்துச் செல்வதுண்டு. அங்கு அவர் சந்திக்கும் நபர்கள் சொல்வதைக் கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். 'நான் சமூகத்தில் பலரை சந்திக்கிறேன். அவர்கள் அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதை நான் வெட்கத்தோடு கேட்கிறேன். அவர்கள் பார்லிமென்டில் உள்ள 225 எம்.பி.,க்கள் மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. 

09 January 2024

இலங்கை விவசாயமும் விலங்குகளும்: சேதமாகும் செய்பயிர்கள்

உலகின் 70 வீதமான நாடுகளில் உள்ள விவசாயிகள் தொழில்நுட்பரீதியான விவசாயத்தில் கவனம் செலுத்தி, அதற்கமைவாக செயல்படும் காலகட்டத்தில், நாம் இங்கு பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளைப் பிடித்து சீனாவுக்கு அனுப்புவது பற்றி இன்னும் பேசுகிறோம். SMART FARMING என்றால் என்ன? இந்த முறைமையின் கீழ், அந்தந்தத்துறைகள்; கணினி அல்லது ஸ்மார்ட் போனுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களை தெளிப்பதும், ட்ரோன் தொழில்நுட்பத்தின் கீழ் பூச்சிக்கொல்லி எண்ணெயைப் பயன்படுத்துவதும் ஸ்மார்ட் ஃபார்மிங்கின் செயற்பாடாகும்.

SMART FARMING முறையில், விவசாயத்திற்கு எந்த நேரத்தில் தண்ணீர் தேவை, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கம்ப்யூட்டர் விவசாயிகளுக்கு தெரிவிக்கும். இதனால் விரயம் குறைவதுடன் விவசாயிகளுக்கு நேரமும் மிச்சமாகும். இத்தகைய முறைகளின் கீழ் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்தப் பருவத்தின் விளைச்சலை மதிப்பிடவும் முடியும். சில காலத்திற்குப் பிறகு, வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளும் இவற்றையும் தாண்டி தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நுட்பம் அனைத்தும் மிக விரைவானது.

08 January 2024

மக்களைப் பாதிக்காத வரியே மக்களை பாதுகாக்கும்!

இந்த நாட்களில் சமூகத்தில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்று ரின் எண். வரி செலுத்துவோர் அடையாள எண் அல்லது டின் எண் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் ஒருமுறை அறிவித்தது.

அரசாங்கத்தின் இருப்புக்கு போதுமான வரி வருவாய் அவசியம். ஆனால் வரி வசூல் செயல்முறை குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரின் எண் கிடைக்கும், ஆனால் உண்மையில் அனைவராலும் வரி செலுத்த முடியாது. வரி கட்ட முடியாது இருப்பினும் இந்த டின் நம்பரை பெற வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. 

07 January 2024

தொழில் தொடங்குவதற்கு பயத்தை எப்படி தாண்டி வருவது?

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

02 January 2024

வரலாறுபடைக்கும் வரி அதிகரிப்பு பணவீக்கத்தை ஊக்குவிக்குமா?

  • இந்நாட்டில் 60.5 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
  • 91 சதவீத குடும்பங்களின் சராசரி மாதச் செலவு அதிகரித்துள்ளது.
  • 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது.
  • 97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் வரிவருவாய் மூன்று லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆனால், இடையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு அதிகரிப்பு ஆகும்.

கலைவாணியின் கனவு

எமது பெண்களின் கண்களில் தேங்கி கனவுகளாய் நிற்கும் நினைவுகளை வெற்றிக் கனவாக்கும் ஒரு கதை!

காட்சி 1:

இடம்: ஒரு சிறிய கிராமம். காலம்: காலை.

கலைவாணி, வயது 25, தன் வீட்டின் முன்றலில் உக்கார்ந்து, சேலைகளை மடித்து வைக்கிறாள். அவள் முகத்தில் நிரம்பிவளியும் கனவுகள், கைகளில் ஆசாத்தியமான திறமை. பக்கத்தில் சேலைக் கடை வைத்திருக்கும் ஆனந்தன், கலைவாணியின் தந்தை, அவளைச் சோகமாகப் பார்க்கிறார்.

01 January 2024

புத்தாண்டில் நிகழட்டும் புதிய விடியல்

2023 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றாகும். பொருளாதார நெருக்கடி, அரசியல் பதற்றம், மற்றும் சமூக ஒற்றுமையின்மை ஆகியவை நாட்டை சூழ்ந்திருந்தன. இருப்பினும், 2024 ஆம் ஆண்டு புதிய விடியலுடன் தொடங்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

புத்தாண்டு மலர்ந்திருக்கிறது. ஓர் ஆண்டு முற்றுப்பெறுவது என்பது ஒரு முடிவோ அல்லது தொடக்கமோ அல்ல; நாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, எதிர்வரும் நாள்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை விதைப்பது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டைக் கடந்து 2024ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய ஆண்டின் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் புத்தாண்டில் நிகழவிருக்கும் தருணங்களுக்கு முகங்கொடுக்கத் தயாராவோம். 

புத்தாண்டில் நிகழ வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் பின்வருமாறு:

  • பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
  • அரசியல் பதற்றம் குறைக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சமூக ஒற்றுமை மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.