ADS 468x60

04 March 2015

கையைக் கட்டி நில்லாதே!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!

இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே

உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே
கண்டது எல்லாம் அஞ்சாதே
குட்டக் குட்டக் குனியாதே தோழா!!

காடும் மேடும் உன்னோடு
கடலும் காற்றும் உன்னோடு
இறந்தும் இருப்போம் மண்ணோடு
இறக்கும் வரைக்கும் போராடு
கல்வியும் எமக்கொரு ஆயுதமே!
கைகளில் நீயெடு முன்னேறு
வறுமை எமக்கொரு தடையில்லையே- அட போராடு
இன்று மட்டும்தான் எமக்கு சொந்தம்
நேற்றையதை நினைத்து நீ வருந்தாதே!
மனங்கள் மட்டும் உறுதி கொண்டால்
மழை வெயில் எமக்கில்லை மனிதரில் பதரில்லை!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

மேற்கே சூரியன் உதிக்காது
மேடைப் பேச்சும் உதவாது
வாக்கை அள்ளி வீசுவதால்
வாழ்க்கை ஒன்றும் உயராது....
ஒன்றாய் இருந்தால் ஜெயித்திடலாம்
உதவாக் கரைகளை ஒளித்திடலாம்
மக்கள் கூட்டம் விழித்து விட்டால்- அட அழியாது
நம்பி நம்பியே இழந்து விட்டோம்
நரிகளும் பரிகளும் புலியாச்சு
நம்பிக்கை மட்டும் நமது சொத்து
தடைகளை உடைத்திடு சரித்திரம் படைத்திடு..
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க

28 January 2015

ஆண்டு நூறு வாழ்க

ஆண்டு நூறு வாழ்க
அமைதி இன்பம் சூழ்க
நாடும் செல்வம் யாவும்
நாளும் வந்து கூடும்

06 January 2015

நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

கண்ணணப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு
நீயுச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா

18 November 2014

எங்க ஊரில் மழை.

மழையே -நீ
முகில்களை உதிர்த்தவில்லை
முத்துக்களை உதிர்த்துகிறாய்
இன்னும் பிரபஞ்சத்தின்
பச்சைக்கெல்லாம்
பிச்சை போடுகிறாய்
ஆக மொத்தம்- நீ
கொடுப்பவன் அதனால்
மேலேயும்- நாம்
பெறுபவர் அதனால்
கீழேயும் இருக்கிறோம்.

08 October 2014

வயல் குழந்தாய்

வயல் குழந்தாய்
நீ அருந்தும் மார்புகள்
பிய்த்து எறியப்படுகிறது
வயல் கொஞ்சும் எங்கள்
பசுமை நிலங்களை
பாலைகளாக்கவோ
வேலை செய்கிறீர்கள்.....

உனக்கு மட்டும்
கைகால் இருந்திருந்தால்
இந்த இயந்திர இதயங்களை
இழுத்தெறிந்திருப்பாய்...

01 October 2014

மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்.

வகுப்பறையில் வாசிக்கவேண்டியவர்கள்
வழிகலெல்லாம் யாசிக்கிறார்கள்
மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்
புள்ளிவிபரம் காட்டி
போட்டி போட்டு பேசிகிறார்கள்!!! ஐயகோ!!

வயிற்றை நிரப்ப முடியாமல்
வாடியபோதெல்லாம் கழுத்தில்
கயிற்றை இறுக்கி கொலை
செய்யவேண்டியவர்கள் இவர்கள் அல்ல,

16 September 2014

மண்ணில் பிறந்தாலே

மன்னவனானாலும் மாடோட்டும் சின்னவனானாலும்
மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணுக்கிரைதானே!!

உன்னில் இருப்பானடா இறைவன் என்னிலிருப்பானடா
எண்ணி உதவிசெய்தால் அதுபோல் இன்பங்கள் வேறுஉண்டோ

சட்டம் படித்தாலும் பெரிய பட்டம் கிடைத்தாலும்
இட்டதே சேருமையா இதற்குள் எத்தனை பேதமையா

கூழ்காச்சி கொடுக்கிறான் அவனே ஆள்வைச்சிம் அடிக்கிறான்
வீழாமல் வாழ்வதுபோல் காட்டியே பாழாகிபோவதைப் பார்.....