- சமூகத்தின் மறைமுக வரி (Social Regressive Tax): சட்டப்பூர்வ மதுபானத்தின் மீதான
அதீத வரி விதிப்பு முகாமைத்துவமே (Taxation Management), மலிவான, நச்சுள்ள கசிப்பை நோக்கி ஏழைகளைத்
தள்ளும் ஒரு மறைமுகமான மற்றும் கொடூரமான சமூக வரியாகச் (Social Regressive Tax) செயல்படுகிறது.
- கண்ணியத்தின் இழப்பு: வென்னப்புவ (Wennappuwa) பகுதியில் இடம்பெற்ற ஐந்து பேரின்
உயிரிழப்புக்கள், வெறுமனே மதுப்பழக்கத்தின் விளைவல்ல; மாறாக, உழைக்கும் மக்களின் நிதி
நெருக்கடியும் (Financial Distress) பொருளாதாரத் தன்னிச்சையும் (Economic Discretion) அவர்களின் உயிர்க்கான கண்ணியத்தைக்
குலைக்கும் தீவிரமான பிரச்சினையின் பிரதிபலிப்பாகும்.
- அமைப்பியல் குறைபாடு: கசிப்பு வர்த்தகத்தை விநியோகித்த
பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டவிரோத வலையமைப்பை வளர்க்கும் பொருளாதாரக் கொள்கைக் குறைபாடுகள்
மீதான பொறுப்புக்கூறல் இல்லாமல், இந்தத் துயரச் சங்கிலியை ஒருபோதும் உடைக்க முடியாது.
- உலக சுகாதார எச்சரிக்கை: உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, சட்டவிரோத மதுபானங்கள் பெரும்பாலும் மெத்தனால் போன்ற உயிருக்கே ஆபத்தான நச்சுகளைக் கொண்டிருப்பதால், இவற்றைத் தடுத்தல் என்பது சட்ட அமுல்படுத்தலை விட, பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகவே முதலில் அணுகப்பட வேண்டும்.
அழகு தேற்றாத்தீவு..
07 January 2026
கசிப்பு அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழப்பு: அது சொல்லும் சேதி என்ன?
03 January 2026
2026 பூகோளப் பொருளாதாரம்: அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் உள்ளது, ஆனால் அத்திவாரம் பலவீனமானது.
உலகப் பொருளாதாரம் இந்த அதிர்ச்சிகளைத் தாங்கும் ஒருவித "மீள்தன்மையை" (Resilience) வெளிப்படுத்தியிருந்தாலும், அதன் அடிப்படை அத்திவாரம் இன்னும் பலவீனமாகவே உள்ளது.
01 January 2026
ஆழம் தேடும் இளமையின் விழித்திரை!
"நேரம் என்பது நொடிகளில் கடப்பது அல்ல; அந்த நேரத்தில் என்ன உணர்ந்தோம், என்ன சாதித்தோம் என்பதே!"
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத ஒரு பெரும் சவாலை, எங்கள் இளைஞர்கள் சமூகம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. உலகில் அதிக கனவுகளைச் சுமந்து, தங்கள் வாழ்வை நகர்த்தும் கூட்டம் எங்கள் இளையோர் கூட்டம் தான். இவர்களின் இமைக்கா நொடிகள் இதயங்களையும், இமயங்களையும் நோக்கிய வண்ணமாகவே உள்ளன. மாற்றங்கள் விரும்பும் உலகில், மாற்றத்தின் துளிர்கள் இந்த இளைஞர்களே என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலர்ந்திருக்கும் 2026 புதிய வருடம் கடந்து வந்த ஆண்டிலிருந்து நாம் முயற்சி பெறுவதற்கான, மீண்டெழுவதற்கான, வெற்றிகளைச் சுவைப்பதற்கான ஒரு ஆண்டாக
அமையும் என்ற உறுதியான நம்பிக்கையில் இன்று உங்கள் அனைவரோடும் எனது புத்தாண்டு
வாழ்த்துக்களைப் பகிர வந்துள்ளேன்.
பொருளாதார
ரீதியாகவும், வேறு பல சவால்களாலும் பல பின்னடைவுகளைக்
கொண்டு தந்த 2025 ஆம் ஆண்டினை, நாம் உண்மையில் துயரத்துடன் அல்லாமல், அதன் அனுபவங்களிலிருந்து பாடம்
கற்றுக்கொண்டு, அதை ஒரு பலமான அடித்தளமாக மாற்றிய
மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும். அதேபோன்று, அவ்வாறான ஒரு சவாலான ஆண்டிலிருந்து புதிய
ஆண்டு எங்களுக்கு வருகின்ற பொழுது, மனதார ஒரு துயரமான ஆண்டிலிருந்து ஒரு மகிழ்ச்சியான ஆண்டில் காலடி எடுத்து
வைக்கின்றோம் என்கின்ற நேர்மறை எண்ணம் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஆழமாக வேரூன்ற
வேண்டும்.
எல்லா
சவால்களையும் மீறி, அவற்றை எதிர்த்து நின்று கடந்து வந்து, இன்னமும் தளராமல் மீண்டெழுகின்ற சக்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம்.
இந்தப் புதிய ஆண்டில், அந்தச் சக்தியை இன்னும் பலமடங்கு
கூட்டிக்கொண்டு, விழுந்த இடத்தில் இருந்து சிறகடித்துப் பறக்கும் குஞ்சுகள் போன்று, இந்த 2026 ஆம் ஆண்டில் பரந்த வானத்தில் மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் பறந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
உங்கள்
ஒவ்வொருவரின் வீடுகளிலும், வாழ்விலும் சந்தோஷம் பொங்கட்டும்!
புதிய
முயற்சிகளும், நேர்மறை எண்ணங்களும், மீண்டெழும் சக்தியும் நிறைந்த ஒரு வெற்றி ஆண்டாக 2026 அமைய உளமார வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் S.T.Seelan
31 December 2025
2025இல் எனது 500வது படைப்பு: ஒரு புத்தக உருவாக்கத்துடன்.
நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம். -ஷெல்லி.
ஆம், இது எனது 500 ஆவது ஆக்கம். நன்றி சொல்ல வேண்டிய நேரம். இத்தனை சிரமங்கள் மத்தியிலும் இந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களுக்கு இலட்சக்கணக்கயான தகவல்களைக் கடத்தி அவர்களை விழிப்படைய வைத்திருக்கின்றேன் என்ற ஒரு மகிழ்ச்சி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் கற்றதற்கான கடமையை முடியுமானவரை செய்து வருகின்றேன் என்ற பெருமை மறுபக்கம். இந்த நாளில் இன்னுமொரு நல்ல விடயத்தினை நான் பகிர விரும்புகின்றேன் அது எனது 32000 சொற்களுக்கு மேலடங்கிய 'சிறப்பான குடும்பம் செழிப்பான மட்டக்களப்பு' எனும் புத்தகம், அதில் பல நல்ல விடயங்கள் ஆராயப்பட்டு எழுதி இருக்கின்றேன். நிச்சயம் அதனை 2026 இல் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளேன். இது நல்ல விதையாக ஒரு குடிசை நிலத்திலிருந்து கொள்கைத் தளம் வரை எனது அனுபவ ஆய்வுத் திறனில் உருவாக்கி இருக்கின்றேன்.
28 December 2025
செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இலங்கையின் சிறு தொழில் முயற்சியாளர்களும்
26 December 2025
டிட்வா சூறாவளியும் இலங்கையின் பொருளாதார மந்தநிலை அபாயமும் -நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு தேசத்தின் மீட்புப் பாதை
- டிட்வா சூறாவளியினால் இலங்கையின்
பொருளாதார வளர்ச்சி (GDP) 2026 ஆம் ஆண்டில் 2.9 சதவிகிதம் (Percentage) வரை வீழ்ச்சியடையும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
- நாட்டின்
25 சதவிகிதம் (Percentage) மக்கள் நாளாந்தம் 1100 ரூபாவுக்கும் குறைவான வருமானத்துடன் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதுடன், 33 சதவிகிதம் (Percentage) குடும்பங்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக கடன்படும் நிலையில் உள்ளன. - டிட்வா சூறாவளி ஏற்படுத்திய நேரடிப்
பௌதிகச் சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொடாலர்கள் (இலங்கையின் GDP இல் 4 சதவிகிதம்) என உலக வங்கி (World Bank) கணிப்பிட்டுள்ளது.
- இறக்குமதி இடைவெளியை (Import Gap) நிரப்ப சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய 206 மில்லியன் அமெரிக்க டொடாலர் ஆர்.எஃப்.ஐ (RFI) கடன் என்பது ஒரு தற்காலிகத் தீர்வே தவிர, நீண்டகாலக் கடன் சுமையை இது தீர்க்காது.
25 December 2025
தேசியப் பாதுகாப்பு தினத்தின் சமூகப் பொருளாதார மீட்சி: அழிவின் பாடமும் மீண்டு எழும் இலட்சியமும்
பேரிடர் அதிர்ச்சி: 2004 சுனாமி மற்றும் சமீபத்திய திட்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகள், இலங்கையின் சமூக-பொருளாதார அடித்தளத்தில் நிரந்தர அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
மீட்சி மற்றும் பாதிப்பு: பேரழிவுகளின் நிதி மற்றும் மனிதச் செலவுகள், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக ஏழைகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில்.
கட்டமைப்புச் சவால்கள்: பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடுகளில் உள்ள இடைவெளிகள், மோசமான நகர்ப்புற திட்டமிடல், மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளின் (EWS) பலவீனமே சவால்களாக நீடிக்கின்றன.
உள்ளூர் மைக்ரோ இன்சூரன்ஸ்: உள்ளூர் பொருளாதாரங்களை மீட்டெடுக்க, மீட்சியை விரைவுபடுத்தும் நுண்ணியக் காப்பீட்டுத் திட்டங்கள் (Micro-Insurance) மற்றும் காலநிலை-தாங்குதிறன் கொண்ட கட்டமைப்பு முதலீடுகள் அவசியம்.
- பொறுப்புணர்ச்சி: வளர்ச்சி என்பது வெறும் பொருளாதாரக் குறியீடுகளால் அளவிடப்படுவதல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்வதில் உள்ளது.



