அழகு தேற்றாத்தீவு..
13 May 2025
இலங்கைத் தமிழ் சமூகத்தில் மெய்நிகர் கற்றல் - சமூக மாற்றமும் கல்வி வளர்ச்சியும்
12 May 2025
ஆட்சியாளர்களே! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.
இன்று நான் உங்கள்
முன் நிற்பது ஒரு ஆழ்ந்த கவலையின் வெளிப்பாடாக. நமது தேசத்தின் வடகிழக்குப்
பகுதியில், வாக்குப்பதிவில்
பங்கேற்காதவர்களின் எண்ணிக்கையும், நிராகரிக்கப்படும்
வாக்குகளின் அளவும் தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இது வெறும்
புள்ளிவிவரங்களல்ல, இது
ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் வேதனையின் வெளிப்பாடு.
மட்டக்களப்பின் மரபுசார் கலைகள்: வீழ்ச்சியும் மீள்வருவாக்கத்துக்கான வாய்ப்புகளும்
யாரிடம் உதவி கேட்கணும் என்பது ரொம்ம முக்கியம்
சித்திரா பௌர்ணமி: ஈழத்தமிழர்களின் ஆன்மிகமும் பண்பாட்டுப் பிணைப்பும்
11 May 2025
அம்ஷிகாவின் நீதி தாமத்தித்தால்!
10 May 2025
நாட்டில் ஆட்சி தொடர்பான நெருக்கடி- அதிகாரப் போட்டியில் உள்ளூராட்சி சபைகள்
அரசியலில் இது எனது நுாற்று ஐம்பதாவது கட்டுரை, இது ஒரு மகிழ்சியான தருணம் எனக்கு. அதனால் இந்த விஷேச கட்டுரையை எழுதுகின்றேன்.
இலங்கையின் உள்ளூராட்சி அரசாங்கங்களின் தற்போதைய அரசியல் சூழ்நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சிக்கலானதாக மாறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாததால், தேசிய மக்கள் சக்தி (NPP) தேசிய அளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், உள்ளூராட்சி சபைகளில் அதிகாரப் போட்டிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான NPP, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. இது தேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், உள்ளூராட்சி த் தேர்தல்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி த் தேர்தல்களிலும் இதேபோன்ற சூழ்நிலை காணப்பட்டது.