யாருக்கு தெரியும்
புதையல் தோண்ட பூதம் வரும் எண்டு
என் கண் செய்த கொடுமைதான்
என் நெஞ்சை புண்ணாக்கியது
மல்லிகையாய் மணம் வீசி
தேநிலவாய் ஒளி கலந்த
எனது அந்த நாட்கள்
சூனியமாய் போனது இப்போ
உலகமென்னும் மாயைக்குள்
நானும்
குருதி பச்சிய குப்பிகள்!
பல்லைக்கட்டும் பாம்புகள்!
பொய் உரைக்கும் நரிகள்!
நம்பவைத்து கழுத்தறுக்கும் துரோகிகள்!
உணர்வை காட்டி
மனசை பறிக்கும் அரக்கர்கள்!
இவர்களை
சந்தித்து சரிந்து விட்டேன்
வந்தித்து வாடி விட்டேன்
உண்மை ஊமையானதால்
காதல் காசிக்கு விற்கப்படும்
கொடுமை மிஞ்சிவிட்டது!
என் உணர்வு, சந்தோசம்,
அழகு, சிந்தன ஓட்டம்,
கரிய பலம்
எல்லாத்தையும்
கொண்டுவிட்ட உனக்கு
என் அற்ப உயிரை கொல்வது பெரிதா?
என் அற்ப உயிரை கொல்வது பெரிதா?
நாட் குறித்து சொல்
நானே வருகிறேன்...
0 comments:
Post a Comment