ADS 468x60

01 February 2020

ஈர அருவி ஓடும் இனிமையான தேசம்!

ஈர அருவி ஓடும்- ஒரு
இனிமையான தேசம்
மலையோரம் குளிர் வீச
வயல்கள் ஆடும் வீடு

கூடி அலைகள் மோதும்- கடல்
கோடி அழகு சேர்க்கும்
தமிழ் அன்னை அரசாண்ட
தலைமை கொண்ட நாடு

உயிரிலும் மேலான தமிழை வளர்த்த தாய்
உறவுகள் சீராக உயிரைக் கொடுத்த தால்
ஈகை பெருகும் ஈழமண்

கூத்தோடு கலைகளும் கொண்டாடி மகிழும்
மீன் மகள் இசைகூட்டிப் பாட்டிசைக்கும்
நாற்றொடு தென்னையும் நின்றாடித் திகழும்
வளம் பல கொலித்திடும் மருத நிலம்

மேழிகள் எழுதிடும் நிலம் கீழே
மேதினி உயர்ந்திடும் மலை போலே
மக்களின் மனமெல்லாம் வாழவைக்கும்
ஈகை பெருகும் ஈழமண்

எல்லோரும் ஒன்றாய் இணைந்திடும் தேசம்
இங்கில்லை பேதம் இசைவிருக்கும்
இல்லாதோர் இல்லாத மீனகத்தின் வாசம்
இந்நாட்டின் வேதம் மீண்டிடுவோம்

உரிமைகள் உலரும் பலம் சேரு
உறவுகள் மலர்ந்திட நிலம் பேணு
உலகத்தில் யாரு உனக்கீடு
ஈகை பெருகும் ஈழமண்

0 comments:

Post a Comment