காலை விடிந்தது உனக்காக- என்று
கத்தும் சேவலும் கணக்காக
கிழக்கில் உதிக்கும் சூரியனை- முந்தி
கிழர்தெழு நாளை நமதாகும்
கதிர்கள் ஆடும் வயல் நிலமும்
கரைகள் தோறும் கடல் வளமும்
காடு மேடுகள் குளங்களென
கொண்டது எமது பூர்வாங்கம்
உழுது வாழ உறுதி கொள்வோம்
ஊரைக் கூட்டி உலகை வெல்வோம்
அழுது வாழும் அவலமெல்லாம்
அறவே நம்முள் விலகச் செய்வோம்
0 comments:
Post a Comment