ADS 468x60

19 June 2011

கண்ணகி இலக்கிய விழா.

"மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு

கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு"

கண்ணகி தனிப்பெரும் இலக்கிய, ஒழுக்க, தமிழ் பண்பாடுகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழும் ஒரு படைப்பாகும். இதனால்தான் இன்றும் குறிப்பாக தமிழர்கள் வாழ் இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் அவளுக்கு விழா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பொதுவாக விழாக்கள், நிகழ்வுகள் அவற்றைப்பாதுகாப்பதற்க்கான முனைப்புகள் இதுவரை எடுக்கப்படவில்லை காரணம் மூன்று தசாப்தகால யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் பலவீனம் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களை சொல்லலாம். இவற்றை உணர்ந்த மட்டக்களப்பு வாழ் அறிஞ்ஞர்கள், கலைஞர்கள் சமுகம் பெருவளவிலான முனைப்பில் இதனை இப்பொழுது அழகாக திட்டமிட்டு நடத்துகின்றனர்.

13 June 2011

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...

'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடி தொழ மறுப்பவர் மனிதர் இல்லை'  அன்னை வர்ப்பினில்தான் ஒரு பிள்ளையின் இலட்சியம், ஆழுமை, மனப்பாங்கு விருத்தி, தலைமைத்துவம் என்று எல்லாம் அடங்கி இருக்கின்றது என்பதை பறை சாற்றும் வகையில் ஒரு உன்னத பணியை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் மற்றும் சமுகத்தொண்டனுமான திரு ஞா.தில்லைநாதன் அவர்களின் தலைமையில், 11 யூன் 2011 அன்று கிழக்குப்பல்கலைக்கழக பிரதான மண்டபத்தினில் அன்னையர் கௌரவிப்பு நிகழ்வு, கலைப்பீட சிறப்பு கற்கை மாணவர்களின் உறுதுணையுடன் நடத்தப்பட்டது. அதிதிகளாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ஜெய்சங்கர் மற்றும் பிரதிப்பதிவாளர் மும்தாஜ் ஆகியோருடன் மாணவர்களின் தாய்மார், மாணவர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்...... 

இதில் மானவர்களின் அன்னையர்கள் அவர்களின் முன்னே, இப்பிள்ளைகளை பெற்றெடுத்த பெருமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது எல்லோரயும் மனம் நெகிழ வைக்கும் ஒரு பெறுமதி மிக்க நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழும்போதே போற்றுதல் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அங்கு அவர்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள், கல்வி நிலை, அவர்கள் மீது அன்னையர்கள் எடுக்கவேண்டிய கருசனைகள் என்பனவும் சிலாகிக்கப்பட்டதுடன்.  மாணவர்கள் விரிவுரையாளர்களின் கவிதை, பேச்சு, இன்னோரன்ன நிகழ்வுகளும் சேர்த்து அவையை களைகட்ட வைத்தமை சிறப்பு. இதில் பாராட்டுகளும் வாழ்துகளும் அதன் ஒருங்கிணைப்பாளர் தில்லைநாதனுக்கே சேரவேண்டும்.

புத்தக வெளியீடு
அன்னயர் தின சிறப்பு மலர் வெளியீடு ஒன்று இடம்பெற்றது. இதில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான ஆக்கங்களை உள்ளடக்கமாக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதன் ஆசிரியராக செல்வி நிஸாந்தினி, 3ம் வருட சமுகவியல் சிறப்பு கற்கை மாணவி இருந்து நெறிப்படுத்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இம்மலரின் முதல் பிரதியினை சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான மா.செல்வராசா அவர்கள் பெற்றுக்கொள்ள அடுத்த பதிவு பிரதிப்பதிவாளர் மும்தாஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஓளிந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து, மாணவர்களின் இயலுமைகளை அவர்களது தாய்மாரின் முன்னே அறியப்படுத்தி. வாழ்க்கையின் ஒளி பொருந்திய பாதைக்கான வழிகளாக விரியச் செய்யும் ஒரு ஜனரஞ்சக சமுகமயமாக்கல் செயற்பாட்டியின் முதற்க்கட்டமாக இதனை செய்துள்ளதாக விரிவுரையாளர் ஞா.தில்லைநாதன் குறிப்பிட்டிருந்தார்.
நினைவகளின் நிழல்கள்...



10 June 2011

கண்ணகிக்கோர் கவியாரம்....

















மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள்.

மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி

தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன்
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள்
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில்
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக

பத்தியால் கொண்ட சித்தியால் பெற்ற வெற்றியால்
உள்ளத்தால் உயர்ந்த எண்ணத்தால் அழகு வண்ணத்தாள்
மெல்லத்தான் மலர்ந்தாள் அழகால் வளர்ந்தாள்
புன்னகைத்தாள் தெய்வத்தைப் பின்னவைத்தாள்
கண்ணகித்தாய் என்று எண்ணவைத்தாள் நம்மையெல்லாம்.

மெல்லத்தான் அழகை சொல்லத்தான் இடையிலில் மாசாத்தான்
மகனாய் வளர்தான் பக்தியில் உயர்ந்தான் சித்திகள் பெற்றான்
இதை சொல்லத்தான் மனதில் எண்ணித்தான் விரைந்தான் மதுரையை அடைந்தான் கோவலன் தந்தை மாசாத்தான்.

இட்டபடி இறைவன் கட்டளைக்கு ஏற்ப்ப கட்டளகி கண்ணகியாள் கட்டளகன் கோவலனை திட்டமிட்டபடி மதரையில் திருமணம் முடித்தனர்.
சட்டங்கள் தவறாமல் தவமயில் கண்ணகியும்
துதித்தாள் கணவனை மதித்தாள் கொண்ட சிறப்பால்
கோவலனும் எதைத்தான் கொடுக்க மறுத்தான் வாழ்வில் சிறந்தான்.....இந்நாளில்....

நெஞ்சில் பட்டதோ ஊழ்வினை தொட்டதோ வாழ்வினை சுட்டதோ
கோவலனை விட்டதோ இல்லை
மஞ்சம் கொண்டதோ மார்க்கம் மாறியதோ மாதேவி ஆசை தேறியதோ மயிலாள் கண்ணகி மதித்த கணவனுக்கு.

இசையில் இழகியதால் இன்பத்தில் பழகியதால்
பிசகாமல் அழகியவள் பின்தொடர்ந்து சென்றதால்
ஆசையில் ஆபரணங்கள் அத்தனையும் விற்றதால்
வசைமொழி கேட்டதால் வாடி நின்றான் கோவலன்.

ஆங்கே மன்னவன் பாண்டியனின் மனைவியின் சிலம்பமும் தொலைந்து போனதுதான் என்னே என்ன ஆச்சரியம்.....
மன்னவன் பாண்டியன் பிடித்தான் கோவலனை அடித்தான் மன்னவனின் வசைகேட்டுத் துடித்தான் தன்நெஞ்சில் தானே கையால் இடித்தான் எண்ணமெல்லாம் துண்டு துண்டாய் ஒடித்தான் கோவலனும்.

பாண்டிமா மன்னவனின் பாவத்தில் கொன்ற செய்தி கேட்ட காலத்தின் காவல் நாயகி, ஞாலத்தின் கற்ப்புக்கரசி, உன்மையை மட்டும் உரைக்கும் உத்தமி, நன்மையை நலமாய் நல்கிடம் மாது என் செய்தாள் தெரியுமா?

மதுரை மன்னனின் மாளிகை நோக்கி
மற்றோர் சிலம்பை கையில் தூக்கி
சென்றாள் சினத்தை உடலெங்கும் பரவி
போய்முன் நின்றாள் கணவனை
கொன்றவர் யார் என்று வினவி
வழக்கைத் தொடர்ந்தாள்
வாழ்கைக் கேட்டு தன்
பிழைப்பைக் கெடத்த பெருமன்னன் முன்னே.

மன்னவன் பாண்டியன் மறுத்துரைக்க,
கையில் இருந்த சிலம்பமும் மன்னவனால்
களவாடியதென்ற சிலம்பமும்
ஒன்றென மன்னன் பொய்யில் -என்னை
பழித்துரைத்ததை தையல் கண்ணகியாள,;
அங்கம் சிவசிவக்க பொங்கிவரும் கோபம்
தகதகென்று நெருப்பாய் எரிய
எங்கும் இருக்கும் இறைவன் இருப்பதென்றால்
மன்னன் வாயின் வார்தை பொய் என்றால்
நின்றால் இறைவன் முன்றால்
உன்மை கொன்றால் மதுரை மா நகரே
பத்தி எரிக என்றாள் சிலம்பை வீசி.

மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு
கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு.

வங்கக் கடல் மாலையிட சங்கத்தமிழ்
எதிரொலிக்கும் மங்களத் திருநாடாம் இலங்காபுரியில்,
நீர்த்தாய் குளிர்பரப்ப நிலத்தாய் வளங்கொலிக்கும்
பார்த்தால் பசிதீர்க்கும் பசிஞ்சோலைப் பட்டினமாம் -
மீனினம் பாட்டிசைக்க மானினம் துள்ளியோடும்
வானகம் கறுக்கக் கண்டு மயில்கள் கோலாகலிக்கும,;
பசித்தோரின் முகம் பார்த்து பசிதீர்க்கும் பொன்னாடாம்
மட்டக்களப்பதனில்,

தாமரை மலர்கள் எல்லாம் வாவெனக் கையசைக்கும்,
மாமதுரை பூத்து நின்று வாசம் பரப்பிநிற்கும்
செட்டியார் குலமக்கள் செறிந்திலங்கும் செடடியூரில்
வந்தமர்ந்த மாதுக்கு கையில் தீச்சுடரும், மடியில் மடிப்பிச்சையும்,
தோழில் காவடியும், சொண்டில் அலகும் குத்தி, வசந்தன் வைத்து
கும்மி கரகம் ஆடி, பசிந்தாள் இலையில் பசிஆற்றி குளிர்தில் வைத்து கொண்டாடும் வைகாசி இது வரும் போது ஊரெல்லாம் கைராசி...

06 June 2011

கவலைக்கிடமாகி வரும் மனித வாழ்க்கை.....

மனிதர்கள் என்ன புல்பூண்டு, பூச்சுகள் கூட அழிந்து விடக்கூடாது என்று சட்டம் இயற்றி அவற்றை எல்லாம் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இன்று மனித அவலத்தில் மிகமோசமாக இருப்பது வீதி விபத்துக்கள்தான். யுத்தம் போன்று மனித சமுகத்தினையே அச்சுறுத்தும் ஒரு இடர் எனவும், அதனால் வீதி சமிக்ஞைகளை கையாழ்வதில் ஒருமித்த அர்ப்பணிப்பு சாரதிகளுக்கு தேவை எனவும் அண்மையில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு மாநாட்டில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

01 June 2011

மட்டக்களப்பு கிராமங்களில் துளிர் விடும் தழிழ் உணர்வுகள்.


'தேன் கதலி சூழ்ந்ததனால் 
தேத்தாத்தீவு என்ற 
நான் பிறந்த மண்ணுக்கு
நல்ல தமிழ் வணக்கம்'

மட்டு வாவி குளிர் பரப்பும் தேத்தாத்தீவினில், தேன் சொட்ட கவிபாடிய கவியரங்க நிகழ்வின் நீள அகலம் பற்றியதான ஒரு குறுக்கு வெட்டு பார்வை இங்கு சிறிய கட்டுரையாகத் தரப்படுகின்றது.

24 May 2011

பெண் சிசுக்களைப் பலிகொடுக்கும் இந்தியா....


இந்த உலகத்தில் இந்தியாவில் ஏழு வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளில் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, தரவுகளின்படி எட்டு மில்லியன் பெண் குழந்தைகள் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர் இந்தியாவில். வறுமை, விருப்பமின்மை, பெண்கள் இன்னொரு வீட்டுக்கு போகும் ஒருத்தி, சீதனக் கொடுமை இது போன்ற ஏராளமான காரணங்களினால் பெண் குழந்தைகள் தாயின் முன்னே பரிதாப கரமாக இறக்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பெண்கள் பிறப்பது ஒரு சாவக்கேடு என்ற ஒரு அநியாயத்துக்கு நியாயமான காரணங்களினால் கருவிலும், பிறந்த பின்னும் எத்தனையோ குழந்தைகள் அழிக்கப்படுகின்றன என்ற உன்மையை பீ.பீ.சீ செய்தி சேவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வான் என்ற பெண்மணி 2 பெண் பிள்ளைகளைப் பெற்று எடுத்து பின்னர் மூன்றாம், நான்காம் ஐந்தாம் பிள்ளைகள் பெண்ணாகப் பிறக்க இருப்பது ஸ்கான் பரிசோதனை மூலம் அறிந்த பின்னா,; தனது மாமியார் அவரை அச்சுறுத்தி, இந்த மூன்று பிள்ளைகளையும் கருவிலே அழித்தனர், அது தனது மாமியார் தன்; மகனை விவாகரத்து செய்யப்பண்ணப் போவதாகச் சொல்லியே இதனை சாதித்தனர். இதற்கு பின் பிறந்தது ஆண்குழந்தை, ஆதலால் அவனுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் கல்வான் தெரிவித்திருந்நதாக அச்செய்தி கூறுகின்றது. அவர்களுக்கு தேவை ஆண் குழந்தையே, ஏனெனில் அப்போதுதான் அவனுக்கு கொழுத்த சீதனம் பெற்று கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக கல்வான் மனமுடைந்து சொல்லி இருந்தாள்.

குழந்தைகளை இறக்கவைக்கும் முறை..
தேவையில்லாத குழந்தைகளை அங்கு கொல்லும் அநாகரிகமற்ற செயல் மிகவும் கொடூரமானது. குழந்தை பிறந்தவுடன் ஈரப்பைக்குள் போட்டு மூச்சி எடுக்கவிடாமல் கொலுவது, பிறந்தவுடன் குழந்தைக்கு பாலுடன் நெல்மணிகளை போட்டு அது மெல்லிய தொண்டையை அறுப்பதனால் அக்குழந்தையை இறக்க வைப்பது, அக்குடுமமபத்தினரால் அல்லது இக்கொலை செய்வதில் பரிட்சயமானவரினால் தான் இவை செய்யப்பட்டு, அந்த ஏழைத்தாய் அதன் பின் குப்பை கூட்டும் வேலைக்கு பலவந்தமாக 50 ரூபாய் பணத்துக்கு அனுப்பி கொடுமைப்படுத்துகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக தழிழ் நாட்டில் தர்மபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில்; அதிகம் காணப்படுவதாக சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் தர்மபுரியில் மாத்திரம் வருடத்துக்கு 1300 கழந்தைகள் அவ்வாறு கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சட்டங்களும் ஓட்டைகளும்...
1961இல் இந்தியா சட்டப்படி சீதனம் வேண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்திருந்த போதிலும் அவை இன்றும் ஒரு படி வளர்சியடைந்து அது வறியவர் செல்வந்தர்கள் என பகுபாடு பார்க்காமல் எல்லோரையும் பாதித்துள்ளது. இந்த பெண்ணின் செய்தி மில்லியன் கணக்கான குடும்பங்களின் மூடத்தனமான செயலையே சுட்டி நிற்கின்றது.

தகவலின்படி 1961 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆனால் அவை இன்று 914 ஆக குறைந்துள்ளது. அதற்கும் மேலாக பெண்களின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் பரிநமித்து நிற்ப்பதோடு, சைனாவின் ஆண்களுக்கான பெண்களின் போதாமையினை விட இந்தியாவில் அது மிக மோசமடைந்துள்ளது, என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.

பரிசோதனைகளும் பாதகமும்.
குழந்தை பிறந்து 24 மணிநேரத்துக்குள் குடம்பத்தினரின் சம்மதம் அல்லது விருப்பத்தடன் கொலை செய்தல் (Infanticide)  மற்றும் கருவிலே பிள்ளையை வளரவிடாமல் சத்திர சிகிச்சை செய்தல்   (Foeticide) இந்த நாட்டுக்கே ஒரு அவமானச் சின்னமாகும் இவை இந்நாட்டின் பெண்பிள்ளைகளை காப்பாற்றுவதற்க்கான பாரிய இடர்களாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.

1974 இன் பின் இந்த பால்நிலையை குழந்தை பிறக்குமுன்னே அறிந்துகொள்ளும் ஆர்வம் இந்நாட்டு மக்களிடையே அதிகரித்துக் காணப்பட தொடங்கியது, என அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிலைய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது, எத்தனையும் ஆண் பிள்ளைகளை பெறலாம் என்பதற்க அப்பால் பொதுவாக சனத்தொகை வளர்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகவும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தொரிவிக்கின்றனர்.

குறிப்பாக 1980 களின் பிற்ப்பாடு, வயிற்றில் கருவுற்றிருக்கும் குழந்தைகளின்; பால் வகுப்பை அவர்களின் உடல் அமைப்பைப் கொண்டு கண்டறியும் பரிசோதனை (Ultra Sound Determination test)  பத்திரிகைகளில் முந்தியடித்துக் கொண்டு விளம்பரப்படுத்தியமை அதன் கேள்வியின் நிலையை உணர்த்துளின்றதல்லவா. 1994 காலப்பகதியில் ஆரம்ப கால உயிரியல் தீர்மானத்திற்க்கான பரிசோதனை (Pre- Natal determination Test (PNDT)) குழந்தைகளின் பால் வகுப்புக் கண்டு பிடித்து குழந்தைகளை கொலைசெய்வது தடை செய்யப்பட்டு இருந்தது.

இருப்பினும் 2004 இல் இது மீண்டும் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டு குழந்தை கருத்தரித்த சிறு காலத்திலேயே கண்டறிய கூடிய நிலையில,; இது இருந்து வந்தது. இருப்பினும் இத்தகைய குழந்தைகளை கருவிலே அழித்தல் சட்டப்படி 12 வாரத்துக்குத்தான் அந்நாட்டுச் சட்டப்படி செல்லுபடியாகும், ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதனை அறிய 14 வாரம் தேவைப்படுகின்ற படியினால்தான் இது சாத்தியமாகின்றது. இன்று இந்திய நாடெங்கும் 40,000 பால் நிலைப் பரிசோதனை நிலையங்கள் முளைத்து, பல விலாசமே இல்லாமல் துலைந்து போய்விட்டதாகவும் BBC செய்தி தெரிவிக்கின்றது.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்த கொலைக்கான ஒட்டுமொத்த முதற்க்காரணம் இந்த குழந்தை பிறக்குமுன்னரான பரிசோதனைகளின் அதிகரிப்பு, சட்டத்தின் இறுக்கமற்ற தன்மை, குடும்பத்தின் மூட நம்பிக்கை, பெண்கள் மீது வைத்திருக்கும் வெறுப்பு, சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன காரணங்கள் இக்குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றது. ஒரு மன வேதனை என்னவெனில் முல்லை கொடி படர கொப்பு இல்லாமல் சுடு வெயிலில் கிடப்பதை தாங்காமல் தனது தங்கத் தேரினை அது படர்ந்து செல்ல நிறுத்திச் சென்ற காருண்யமான நாட்டில் ஒரு மனிதக் குழந்தை வாழவிடாமல் அழிக்கும் செய்தி காதில் வெண்ணீராய் பாயுது.

23 May 2011

தமிழ் முத்தம்..

Myspace Showing Love Graphics Loving Clipart


கைகள் சுற்றி வழைத்து
கழுத்தின் நாண் உயர்ந்து
இழுத்து உடன் அணைதது
பழுத்திருக்கும் இதழோரம்
பனித்திருக்கும் சுவை கலக்கும்
மேலை தேச முத்தச்சுவை
காமம் அடக்கும் கயிறாகலாம்
கன்னத்தில் குழந்தை முத்தம்
கைகளில் வீர முத்தம்
நெற்றியில் காதல் முத்தம்
நெஞ்சில் கலங்கும் முத்தம்
எத்தனை எத்தனை முத்தம்
அத்தனையும் இருந்தாலும்
தழிழ் கலந்து தழுவும் முத்தம்
தரணியிலே நிலைக்கும் நித்தம்


22 May 2011

நாகரிக வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் நாட்டுப்புற வழக்காறுகள்.

மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் மட்டக்களப்பு அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, மட்டக்களப்பில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் அது சமயம், தமிழ், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளை சார்ந்து மட்டக்களப்பில் ஒரு சமுகத்தின் நாரிகக் கண்ணாடியாகவே அமையப்பெற்றிருந்தது.

குறிப்பாக மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை,

1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் என்றும்,
2) பொது மக்கள் இலக்கியம் என்றும்,
3) பொதுப் புராணவியல் என்ற
பெயர்களிலும் வழங்கப்பட்டன.

ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846 ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும்
"Folklore" என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும்.

உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன

ஒரு சமுகத்தின், இனத்துவத்தின் தனித்தன்மையை புடம்போட்டு, பட்டை தீட்டிக்காட்டுவது அதன் வளக்காறுகள், ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டு மரபுகள் என்பவைதான். நாகரிக வேலிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் தேன் தமிழ் வந்து பாயும் மட்டக்களப்பின் வழக்காறுகள் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் தற்பொழுது சிறியளவில் தூசிதட்டி பார்க்கும் ஒரு போக்கு வரவேற்க்கத்தக்கதே. இருப்பினும் அவையெல்லாம் அழிந்து போகும் இத்தறுவாயில் மீட்டெடுக்க போதுமான சத்திகளா! என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. சோதிடம், கிராமிய பூசை நடைமுறைகள், விருந்தோம்பல், கூத்து, கரகம், கும்மி, மகிடி, விளையாட்டுகள், பழமொழிகள், மாந்திரிகம், சோதிடம், பறை மேளம் போன்ற அரிய தழிழ் சொத்துக்கள் இன்று எங்கே போய்விட்டது??
"காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.""http://vadaliyooraan.blogspot.com/"

ஆய்ந்து அறிந்து சொல்லுவது ஒன்றும் முக்கியமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு தழிழுர்கள் ஒவ்வொருவுரினதும் பொறுப்பல்லவா? இல்லாவிடின் நாளை இன்னொருவன் வந்து இங்கு தழிழர்கள் வாழ்ந்தார்களா! என்று கேட்கும்போது, நாங்கள் அவற்றின் அடையாளங்களை துலைத்து பல்லை இழித்தால் பயன் இல்லை.. நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.. இச்சமாதான காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீளமைக்க வேண்டும்.. அது தான் நமது அடுத்த பரம்பரைக்கு இனத்துவ அடையாளமாக அமையும் என்பதை உணர வேண்டும்.
இந்த நிலையில் நான் மட்டக்களப்பின் மத்தியில் முந்திரிகை மணம் வீச வெள்ளரி வளம் கொலிக்கும் புதுக்குடியிருப்பு என்னால் மதிக்கப்படும் ஒரு தழிழ் கிராமம் என்றால் அது மிகையாகாது. அங்கு அண்மையில் நடந்து முடிந்த கண்ணகை குளிர்திதில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அத்தனை பாரம்புரியம், பண்பாடு, நாரிக விழுமியம்..சோக்கான குடிமக்கள்... இது போன்று எமது ஏனைய தழிழ் மக்கள் தங்களது தனித்துவத்தினை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.அதன் சில புகைப்படங்கள் இங்கே...
..

ஆனால் இப்போது, சினிமா மோகம், ஊடக துறையின் முறைகெட்ட அபார வளர்ச்சி, தொலைத் தொடர்பு தொல்லை, பாரம்பரியத்தை பாராமுகமாப் பார்க்கும் அநாகரிக மாயை..போன்ற இன்னோரன்ன காரணங்களால் எமது தமிழ் மக்களின் தூய தனித்துவங்கள் மழுங்கடிக்கப்பட்டு மாற்றான் பிள்ளைகளாக மாறி நமக்கென ஒரு தனித்துவம், கலாசாரம், இன்னும் எல்லாவற்றையும் அழித்து வாழுகின்ற சமுகத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.

பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள் இவர்கள் ஒரு சமுகத்தின் முதுகெலும்புகள் அல்லவா அவுர்கள் வளைந்து விடக்கூடாது நிமிந்து நின்று இந்த கமுகத்தின் தனித்துவம் காப்பது அவர்களது பொறுப்பாகும் அல்லவா??