இலங்கையில் இரண்டு தசாப்தகால யுத்தம் உயிர்களை மட்டும் காவு கொள்ளவில்லை அந்த இனத்துவ அடையாளங்கள், வழிபாட்டு வழக்காறுகள், பாரம்பரியம், நடைமுறைகள், உறவுமுறைகள் என்று எல்லாவற்றையும் இழந்து, ஏதோ! எச்ச சொச்சமாக மிஞ்சிய தழிழ் இனம் பார்க்க ஏதோ மீண்டு வருவது போல் ஒரு உணர்வு இப்போது இருந்தாலும், முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது அதில் இருந்தான சிறிய விடுதலை எமக்கு பெரிதாகத் தெரிகின்றது அவளவுதான். யுத்தவடு இன்னும் ஒரு பரம்பரை அலகை கடத்தும் வரை அது எம்மில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
20 May 2016
'மட்டக்களப்பில் பாரம்பரியத்தை கட்டியிழுக்கும் சடங்கு முறை' ஒரு பார்வை.
இலங்கையில் இரண்டு தசாப்தகால யுத்தம் உயிர்களை மட்டும் காவு கொள்ளவில்லை அந்த இனத்துவ அடையாளங்கள், வழிபாட்டு வழக்காறுகள், பாரம்பரியம், நடைமுறைகள், உறவுமுறைகள் என்று எல்லாவற்றையும் இழந்து, ஏதோ! எச்ச சொச்சமாக மிஞ்சிய தழிழ் இனம் பார்க்க ஏதோ மீண்டு வருவது போல் ஒரு உணர்வு இப்போது இருந்தாலும், முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது அதில் இருந்தான சிறிய விடுதலை எமக்கு பெரிதாகத் தெரிகின்றது அவளவுதான். யுத்தவடு இன்னும் ஒரு பரம்பரை அலகை கடத்தும் வரை அது எம்மில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
01 May 2016
ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது!
முயற்சியாளர்களும், நிறைந்த வளமும் மட்டக்களப்புக்கு ஒன்றும் குறைவில்லை. இங்குள்ள வளங்களை மரபுரீதியாக உற்ப்பத்தி செய்வதில் இவர்கள் கில்லாடிகள், நல்ல கைவினைஞ்ஞர்கள். குறிப்பாக கணவன் மார்களை இழந்த அநேகம் பெண் முயற்ச்சியாளர்கள், இவர்கள் எதிர்நோக்கும் நேரடிப்பிரச்சினை தங்களது உற்ப்பத்திக்கு தகுந்த சந்தைவாய்ப்பு இன்மையும் முதலாளிகளின் சுரண்டலும்தான்.
வளங்கள் தொடங்கி உழைப்புகளும் இவர்களது நலிவுறு நிலையை சாட்டாக வைத்து சுரண்டப்பட்டுவருவது பொது. காரணங்களாக, இன்னும் மரபுரீதியான உற்ப்பத்திகளிலும் தொழில்நுட்பத்திலும் தங்கி இருத்தல், தகுந்த பயிற்ச்சி இன்மை, எதிர்மறையான மனப்பாங்கு, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி போன்ற இன்னோரன்ன காரணங்கள் இந்தப் பிரச்சினைக்கான நேரடியான காரணங்களாக இருக்கின்றன.
இப்படியே இருக்கும் இந்தக் குடும்பங்களின் நிலைமைதான் என்ன?? வறுமை, சந்தையில் போட்டியிட முடியாத நிலை, குறைந்த தரநிர்ணயனம், குறைந்த கேள்வி, ஏமாற்றம் என பல பிரதிபலன்களை ஏற்படுத்திவிடும் நிலையில் எம்மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் . உன்மையில் இவற்றுக்கு பல மட்டங்களில் பரிந்துரைகளை காண முயலவேண்டும், குறிப்பாக முதலீட்டாளர்களை இந்த முயற்ச்சியாளர்களை பயன்படுத்தி தரம்வாய்ந்த பொருட்களை அதிலும் குறிப்பாக உல்லாசப்பயணத்துறையுடன் ஒருங்கிணைந்தவாறு உற்பத்தியாகும் பொருட்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பினையும், நம்பகத்தன்மையினையும் ஏற்படுத்தும் முயற்ச்சிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
அத்துடன் நீண்டகாலத்துக்கு இவர்களை கண்காணித்து உற்பத்தியில் தொய்வினை ஏற்படுத்தாத ஒரு நீண்டு நிலைக்கும் பொறிமுறையை ஏற்ப்படுத்த வேண்டும் இவை மூலம் நிச்சயம் ஒரு நலிவுறுநிலையில் உள்ள சமுகத்தின் வாழ்க்கைத்தரத்தினை கட்டியெழுப்பமுடியும்.
"ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது? சில கோழை கும்பல் தான் வாழவேண்டி பேதங்கள் கொண்டாடுது!
27 April 2016
பயனுள்ள கல்விதானா இவைகள்?
எம்முன்னோா் கல்வி பற்றி பல விடயங்களை கூறியுள்ளனா். ‘அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது‘ என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது. ஆனால், வெளியில் இருப்பவற்றை மனித மனதிற்குள் ஏற்றுவதுதான் பிரிட்டிஷ் கல்வி முறை. அது ஊக்கம் அளிக்கும் கல்வி முறையல்ல; தகவல் அளிப்பது மட்டுமே கல்வியாக உள்ளது. இதுதான் கல்விமுறையில், மனிதனின் புரிதலைப் பற்றிய அடிப்படை வேறுபாடு.
படித்த வாரிசுகளை எமது சமுகம் வன்முறையாளா்களாக பாா்க்க விரும்புவதில்லை.
இன்றய காலத்தில் கல்வி மனிதனை அழிக்கவும் அதுபோல் பாதுகாக்கவும் இருக்கின்ற ஒரு கருவியாகிவிட்டது. அதனால் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது.
அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.
18 April 2016
இன்னும் எழுச்சியடைவேன்!
நான் வேறமாதிரி!
நான் ஒன்றும் சுத்தமாய் இல்லை
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா
கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு
யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா
கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு
யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!
08 April 2016
ஒரு மாற்றம்

ஒரு மாற்றம்
தடு மாற்றம்
உண்ண முடியாமல் ஒரு கணம்
உறங்க முடியாமல் மறுகணம்
தீக்குள் இருக்கிறேன் சுடவில்லை
மழையில் நிக்கிறேன் படவில்லை
இல்லாததை தருகிறாள்
இல்லாதபோதும் வருகிறாள்
என்னமா சிரிக்கிறாள்
ஏக்கத்தை எரிக்கிறாள்
சொல்லவும் தெரியவில்லை
சொன்னாலும் புரியவில்லை
ஒற்றை நாளில் வந்தாள்
உள்ளத்தை அள்ளி சென்றாள்
ஒளிய நினைக்கிறேன் தொலைந்து
இருந்தும் அவளைத் தேடுகிறேன் வலிந்து
03 April 2016
நீ மட்டும் தூரத்தில்
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்
பனித்துளி உறங்க பருவங்கள் வளர்த்தாய்
நான் அணைக்கும் நல்லநாள்; எது
நீ மட்டும் தூரத்தில்
நீர் சொட்டும் ஓரத்தில்
ராத்திரியும் சுமையாச்சே
மலர்களும் ஏங்குது
மனங்களும் தூங்குது
மழைத் துளியில் மறைந்தாயே
கோபத்தை விடு நீ
பாவம் உன் அழகு
நீ உதித்தால் மட்டும் நான் இருப்பேன்!
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்!!
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்
பனித்துளி உறங்க பருவங்கள் வளர்த்தாய்
நான் அணைக்கும் நல்லநாள்; எது
நீ மட்டும் தூரத்தில்
நீர் சொட்டும் ஓரத்தில்
ராத்திரியும் சுமையாச்சே
மலர்களும் ஏங்குது
மனங்களும் தூங்குது
மழைத் துளியில் மறைந்தாயே
கோபத்தை விடு நீ
பாவம் உன் அழகு
நீ உதித்தால் மட்டும் நான் இருப்பேன்!
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்!!







