நான் மாமாங்கம் சென்று மனமகிழ்ச்சி கொண்டபோது அவரை நினைந்து பாடிய பத்து பாட்டு என் அப்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம, மா, மி, மீ என ஒரே எழுதது வரிசையில் 10 பாடல்கள்!
ம
மன்னனே நான் தொழும் கன்னலே- லோக
மாமறையே மகிழ்ந்து ஒளிதரும் மின்னலே
இன்னல்கள் எம்மினம் இழந்திட –வளத்தை
ஈன்றவா மட்டில் வாழ் ஆண்டவா
சுயம்பாக வந்தவா போற்றி- எமக்கு
சுகமள்ளி வழங்கிடும் கணநாதா போற்றி! போற்றி!







